பளிச் பத்து 145: சிறைச்சாலை

By பி.எம்.சுதிர்

# குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் பழக்கம் எகிப்து நாட்டில் முதலில் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் 16.50 லட்சம் கைதிகள் உள்ளனர்.

# பிரேசில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தால்அவர்களின் தண்டனைக் காலத்தில் 4 நாட்கள் குறைக்கப்படும்.

# போதிய கைதிகள் இல்லாததால், நெதர்லாந்து நாட்டில் சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

# இந்தியாவில் உ.பி., மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் அதிக அளவிலான கைதிகள் உள்ளனர்.

# இந்தியாவில் 30 சதவீதம் கைதிகள்தான் 10-ம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்.

# 2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படிஇந்திய சிறைகளில் 19,242 பெண் கைதிகள் இருந்தனர். இது மொத்த கைதிகளின் எண்ணிக்கையில்4.12 சதவீதமாகும்.

# இந்தியாவில் மொத்தம் 1,350 சிறைச்சாலைகள் உள்ளன.

# இந்தியாவில் சிறையில் இருக்கும் கைதிகளில் மூன்றில் ஒரு பங்கு கைதிகள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

# இந்திய சிறைகளில் சுமார் 60 ஆயிரம் போலீஸார் பணியாற்றுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

11 mins ago

சினிமா

14 mins ago

வலைஞர் பக்கம்

18 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

36 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்