படம் பார்க்கும் முன் படிக்க...
காலையில் பெருமாள் கோயிலில் பாடப்படும் பாடல்தான் நம் கதாநாயகனை எழுப்பி விடுகிறது. சிரமப்பட்டுக் கண்விழித்து, பல் துலக்கி, குளித்து முடித்துக் காலை உணவாக பூரிக்கிழங்கைச் சாப்பிட்டு முடிக்கிறார்.
இயல்பிலேயே மறதி அதிகம் கொண்ட அவர் முக்கியமான ஒரு வேலையைச் செய்ய மறக்கிறார். அவசரமாய் அலுவலகம் கிளம்ப கதவைப் பூட்டிக் கீழே வந்தவருக்கு பர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டது ஞாபகத்துக்கு வருகிறது. திரும்பவும் வீட்டுக்குச் செல்பவர், பர்ஸை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிச் செல்கிறார். அப்போது, அவர் மறந்து வைத்த மற்றொரு பொருளால் எழுகிறது புதுச் சிக்கல்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது தொடங்குகிறது மற்றொரு மகா சிக்கல். செய்யத் தவறிய பணியொன்று அவரைப் பிணியாய்ப் படுத்தியெடுக்கிறது. அம்முக்கியப் பணியை முடிக்க அவர் தெருத்தெருவாய் அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கும் ரகம். கூடவே சிந்திக்கவும் வைக்கிறது.
அந்த வேலைக்காக அவர் தேடிப்போகும் வாசல்களில் சில மூடியிருக்கின்றன. சில பூட்டியிருக்கின்றன. சிலவற்றுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.
கடைசியாக என்னவாயிற்று? நாமும் திறப்புக்குள் நுழையலாமா?
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
31 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
29 mins ago
சினிமா
47 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
41 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
55 mins ago
வலைஞர் பக்கம்
59 mins ago