எம்ஜிஆர் 100 | 88 - கலைஞருக்கெல்லாம் வள்ளல்!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர். கேமராவை கையாள்வதில் நிபுணர். புகைப்படம் எடுக்கும்போது படம் எடுப்பவர்களுக்கு அருமையாக போஸ் கொடுத்து ஒத்துழைப்பு அளிப்பதுடன், அவர்களின் நடைமுறை சிரமங்களையும் அறிந்தவர். ஸ்டில் கேமரா மட்டுமின்றி, படப்பிடிப்பு கேமராக்களின் கோணங்களையும் பெரும்பாலும் அவரே முடிவு செய்வார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் போலவே அவரது புகைப்படங்களும் ரசிக்க வைக்கின்றன!

பொதுவாக, தலைவர்களுடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்க மான ஒன்று. அந்த நேரத்தில் ஆர்வமாக எடுத்துக் கொள்வார்களே தவிர, தலை வரைப் பார்த்த மகிழ்ச்சியில் தங்களைப் புகைப்படம் எடுத்தது யார் என்றுகூட தெரியாமல் சென்றுவிடுவார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல பேரை படம் எடுத்துவிட்டு, தலைவர்களுடேனேயே புறப்பட்டுவிடும் புகைப்படக் கலைஞர் களும் யார், யாரை படம் எடுத்தோம்? யாரிடம் புகைப்படங்களைக் கொடுப் பது என்று தெரியாமல் தவிப்பார்கள். இதுபோன்று, புகைப்படக் கலைஞர்களி டம் கேட்பாரின்றி ஏராளமான புகைப் படங்கள் இருக்கும்.

ஒருமுறை தேர்தல் பிரசாரத்தின் போது மதுரைக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு தங்கியிருந்தார். அவரைப் பார்க்க கட்சியினரும் தொண்டர்களும் குவிந்தனர். காலையில் எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணத்துக்கு புறப்படும்முன், தொண்டர்கள் குழுக்களாக அவர் இருந்த அறைக்குச் சென்று சந்தித்தனர். ஒரு குழுவினர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் தெரிவித்தனர்.

அப்போது, அந்த அறையில் இருந்த புகைப்படக் கலைஞரிடம் எம்.ஜி.ஆர். படம் எடுக்கச் சொன்னார். படம் எடுத்து முடித்தபின் சுற்றுப் பயணம் செல்வதற் காக அறையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் கூடவே பிரசார நிகழ்ச்சிகளைப் படம் எடுப்பதற்காக புகைப்படக் கலைஞரும் புறப்பட்டார். தொண்டர்களும் எம்.ஜி.ஆரை வழி யனுப்ப வந்தனர்.

காரில் ஏறப்போகும் சமயம். புகைப் படக் கலைஞரைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘படம் எடுத்துக் கொண்டவர்களை உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார். ‘‘தெரியாது’’ என்று பதில் வந்தது. அதே போல, தொண்டர்களைப் பார்த்து, ‘‘உங்களை படம் எடுத்த இந்த போட்டோகிராபரின் அட்ரஸ் தெரி யுமா?’’ என்றார். திருதிருவென அவர்கள் முழித்ததே ‘தெரியாது’ என்ற பதிலைச் சொன்னது. புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., புகைப்படக் கலைஞரிடம் அவரது விசிட் டிங் கார்டை படம் எடுத்துக் கொண்டவர் களிடம் கொடுக்கச் சொன்னார். அவரது சமயோசிதத்தை அறிந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அவர்களைக் கையமர்த்திய எம்.ஜி.ஆர்., ‘‘மறக்காமல் புகைப்படங்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள் ளுங்கள்’’ என்று சொன்னதும் எழுந்த சிரிப்பொலி அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!

தலைவர்களுக்கு மாலை போடும்போது, மாலை அணிவிப்பவரின் கைகள் தலைவர்களின் முகத்தை மறைத்தபடி இருக்கும். அந்த நிலையில், படம் எடுக்க முடியாமல் புகைப்படக் கலைஞர்கள் தவிப்பார்கள். இதை எம்.ஜி.ஆர். அறிந்திருந்தார். அதனால், தனக்கு யாராவது மாலை போட்டால் தன் முகத்தை மறைக்காதபடி, அவரது கைகளை இறுகப் பிடித்துக் கொள்வார். புகைப்படக் கலைஞர்கள் திருப்தியாக படம் எடுத்து முடிந்த பிறகே மாலை போட்டவரின் கைகளை விடுவார்.

சந்தையில் எந்த புதிய கேமரா வந்தாலும் எம்.ஜி.ஆர். வாங்கி விடு வார். படப்பிடிப்பின் போது இயற்கை காட்சி களை படம் பிடிப்பார். புகைப்படம் நன்றாக அமைந்தால்தான், அதை எடுத்த கலை ஞர்களுக்கும் நல்ல பெயர். பார்ப்பவர் களையும் படம் கவரும். எந்தக் கோணத் தில் எப்படி எடுத்தால் படம் நன்றாக இருக் கும்? தான் எப்படி போஸ் கொடுக்க வேண் டும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அத்துபடி. பெரும்பாலும் கைகளை வெறுமனே தொங்கவிட்டபடி நிற்க மாட்டார். அது பார்க்க நன்றாக இருக் காது என்பதால், கைகளில் ஏதாவது பொருட்களையோ, பேப்பரையோ ஸ்டைலாக வைத்துக் கொண்டோ, தொண்டர்களை அணைத்தபடியோதான் போஸ் கொடுப்பார்.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஆர்.என். நாகராஜ ராவ். அவரது பெரும்பாலான படங்களுக்கு நாகராஜ ராவ்தான் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். முதல்முறை தமிழக முதல்வராக பதவியேற்றபின், தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் எம்.ஜி.ஆர். அமர்ந்ததும் அவரது விருப்பப்படி முதலில் புகைப்படம் எடுத்தவர் நாகராஜ ராவ்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எடுத்து முடிந்தபின், அதன் சிறப்புக் காட்சிக்கு நாகராஜ ராவையும் எம்.ஜி.ஆர். அழைத்திருந்தார். அப் போது, நாகராஜ ராவ் எம்.ஜி.ஆரிடம், ‘‘படம் நிச்சயம் அமோக வெற்றி பெற்று நூறு நாட்களுக்கு மேல் ஓடும்’’ என் றார். எம்.ஜி.ஆரும் மகிழ்ச்சியுடன், ‘‘நீங் கள் சொன்னது நடந்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன்’’ என்றார். படம் பிரம் மாண்ட வெற்றிபெற்றது. தான் சொன் னதை நாகராஜ ராவே மறந்துவிட்டார். ஆனாலும், எம்.ஜி.ஆர். அவருக்கு நினைவுபடுத்தி ஆயிரம் ரூபாயை பரிசளித்தார். அந்த காலகட்டத்தில் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய்!

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படத்துக்கும் நாகராஜ ராவ்தான் புகைப் படக் கலைஞராக பணியாற்றினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்…’ பாடலில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து எழுதப்பட்ட வரிகள் இவை…

‘அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்;

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல், வள்ளல்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்



‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் விளம்பரத்துக்காக சாட்டையைச் சுழற்றுவது போல, அடிப்பது போல, சாட்டையை உடலைச் சுற்றி பிடித்தபடி என, இந்தத் தொடரின் ‘லோகோ’வில் இடம்பெற்றுள்ள படம் உட்பட விதவிதமாக எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்க, அந்தப் படங்களை எடுத்தவர் நாகராஜ ராவ். இதில் ஒரு விசேஷம், எம்.ஜி.ஆர். தனக்குத் தோன்றிய விதங்களில் தானாகவே யோசித்து கொடுத்த அட்டகாசமான போஸ்கள் அவை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்