ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து பெற்றோர்கள் நெறிப்படுத்தும்போது அவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக உருவாகின்றனர்.
ஆனால், அன்றாடம் பிழைப்புக்கே வழி தெரியாமல் தவிக்கும் பெற்றோருக்கு, குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுகூட மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளின் தனித்திறமைகளை அங்கீகரிக்க முடியாது. பல நேரங்களில் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.
இயலாமையால் பல குழந்தைகளின் திறமைகள் சாவிகள் தொலைக்கப்பட்ட பெட்டகம் போல் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வேலையைச் செய்து வருகிறது நாலந்தாவே ஃபவுண்டேஷன்.
அதன் அங்கமாக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே சென்னை சில்ட்ரன்ஸ் கோயர். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு, மாநகராட்சிப் பள்ளிகள், பார்வை சவால் கொண்டவர்கள், ஆட்டிஸம் பாதித்தவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளில் நல்ல குரல் வளம் மிக்க குழந்தைகள் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது குரல் வளத்தை மேம்படுத்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது அவர்கள் பிரபலமான குழந்தைகள் சினிமாவில் உள்ள பிரபல பாடல்களை கோத்து பாமாலையாக படைத்துள்ளனர். தமிழ் மட்டுமல்ல இந்தி, வங்காளம், உருது, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் உச்சரிப்பு சற்றும் பிசகாமல் பாடும் திறன் கொண்டிருக்கிறார்கள் இக்குழந்தைகள்.
இந்த பாடும் வானம்பாடிகளின் இன்னிசையை ரசிக்க...
முக்கிய செய்திகள்
வணிகம்
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
46 mins ago
வாழ்வியல்
37 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago