சங்கரன்குட்டி பொற்றெக்காட் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

‘ஞானபீட விருது’ பெற்ற சிறந்த மலையாள மொழி படைப்பாளியான சங்கரன்குட்டி பொற்றெக்காட் (Sankaran Kutty Pottekkatt) பிறந்த தினம் இன்று (மார்ச் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் கோழிக்கோட்டில் (1913) பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கோழிக்கோடு இந்து பள்ளி யிலும், சமோரியன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சிறுவயதி லேயே நூல்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* இவரது முதல் கதையான ‘ராஜநீதி’ வெளிவந்தபோது, இவருக்கு 15 வயது. சமோரியன் கல்லூரியில் 1934-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே, நிறைய எழுதிவந்தார். இவரது கதை, கவிதை உள்ளிட்ட படைப்புகள் உள்ளூர் இதழ்களில் வெளிவந்தன.

* படித்து முடித்த பிறகு வேலை கிடைக்காததால் இந்திய, ஐரோப்பிய பண்டைய இலக்கிய நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். கோழிக்கோட்டில் இருந்த குஜராத்தி பள்ளியில் சிறிதுகாலம் பணியாற்றினார். 1939-ல் திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பணியை ராஜினாமா செய்தார்.

* பின்னர் பாம்பே சென்றவர், அங்கேயே தங்கினார். பல்வேறு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டினார். சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். சில காலம் கழித்து, சொந்த ஊர் திரும்பினார். ‘நாடன்பிரேமம்’ என்ற இவரது முதல் நாவல் 1941-ல் வெளிவந்தது.

* விரைவில் மலையாள புனைகதை களத்தில் முன்னணி எழுத்தாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தன் பம்பாய் பயணத்தை விவரித்து ‘என்டே வரியம்பலங்கள்’ என்ற நினைவுச் சித்திரத்தைப் படைத்தார். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, காஷ்மீர் உட்பட பல இடங்களுக்கும் பயணம் செய்தார்.

* அதுமுதல் இவருக்கு பயணம் செய்வதில் அலாதியான ஆர்வம் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டார். பழகுவதற்கு இனிமையானவர் என்பதால், அந்த நாடுகளில் உள்ள சாதாரண மக்களுடன் வெகு சுலபமாக ஒன்றிப்போய்விடுவார்.

* அந்த நாடுகளைப் பற்றிய தனது பயண அனுபவங்களையும் பல நூல்களாகப் படைத்தார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது சரளமான மொழிநடையும், எளிமையான பாணியும் ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்துவதாக வாசகர்கள், விமர்சகர்கள் போற்றிப் பாராட்டினர்.

* ‘ஒரு தெருவின்டே கதா’ நூலுக்காக இவருக்கு கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ‘ஒரு தேசத்தின்டே கதா’ இவருக்கு 1972-ல் கேந்திரிய மற்றும் கேரள சாகித்ய அகாடமி ஆகிய 2 விருதுகளையும் பெற்றுத் தந்தது. இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1980-ல் ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டது. ‘தேசத்தின்டே கதா’ கதை, திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, விருது வென்றது.

* சாகித்ய அகாடமி தலைவராக 1971-ல் செயல்பட்டார். பயண நூல், சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதைத் தொகுப்பு, நாடகங்கள் என 60-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவரது பல படைப்புகள் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஆங்கில, ரஷ்ய, செக், ஜெர்மன், இத்தாலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. வெளிநாடுகளிலும் இவரது நூல்கள் பரபரப்பாக விற்பனையாகின.

* அரசியலிலும் ஈடுபட்ட இவர், 1962-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்கியத்தின் பல களங்களிலும் முத்திரை பதித்தவரும், தன் படைப்புகள் மூலம் மலையாள மொழி இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவருமான சங்கரன்குட்டி பொற்றெக்காட் 69-வது வயதில் (1982) மறைந்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்