அஸ்வினி, பரணி, கார்த்திகை - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை) 

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

நன்மைகள் நடைபெறும் வாரம்.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு சரளமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதரருக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். இப்போது அதற்கு சாதகமான கிரக சூழ்நிலைகள் நிலவுகிறது. எனவே இப்போது நம்பிக்கையோடு செயல்பட்டால் சொந்த வீடு வாங்கலாம்.

அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு மறைமுகமாக எதிர்ப்பு காட்டியவர்கள் இப்பொழுது பணியில் இருந்து விலகிச் செல்வார்கள். அல்லது வேறு இடத்திற்கு மாறுவார்கள். இனி, உங்களுக்கு அலுவலகத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. உங்களுடைய கருத்துக்களுக்கு இப்போது மதிப்பு மரியாதை கிடைக்கும்.

இதுவரை தொழில் தொடங்கும் எண்ணம் இல்லாதவர்கள் கூட இப்போது புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்கள். அதற்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகியிருக்கும் சேதி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு தடைபட்டிருந்த முயற்சிகள் அனைத்தும் இனி தடையில்லாமல் நிறைவேறும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் லாபத்தில் குறைவிருக்காது. தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள். குழந்தைகளிடமும், வாழ்க்கைத் துணையிடமும் இணக்கமாக இருங்கள்.

புதன்-
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பழுதடைந்த பொருட்களை மீண்டும் புதுப்பித்தல் போன்றவற்றை செய்வீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக கையாளாமல் இருக்க வேண்டும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் வியாபாரத்திற்கு கிடைக்கும்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். , நன்மைகள் அதிகமாகும்.
*******************

பரணி -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

பணவரவு தாராளமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கும் வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.

பங்கு வர்த்தகத் துறையில் ஓரளவு முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலக சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சனை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
****************

கார்த்திகை -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவு பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும்.

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகி அரசின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும்.

பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதிய கல்வி அல்லது கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தைக்
கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யவேண்டாம்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.


வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். எவரிடமும் கவனமாகப் பேசுங்கள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார நிமித்தமாக பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சில எதிர்பாராத பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலய வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ளுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

40 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்