ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை  ; (ஜூன் 8 முதல் 14 வரை)  - வார நட்சத்திர பலன்கள் 

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
நிதானமாக செயல்பட்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய வாரம்.
வாரத்தின் துவக்க நாளே சந்திராஷ்டமத்தில் தொடங்குவதால் இந்தவாரம் முழுவதும் நிதானத்தை இழக்காமல், பொறுமையாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டும். அலுவலக பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குழப்பமான நிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வமும் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் இணக்கமாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும்.

செவ்வாய் -
நேற்றைய குழப்பங்கள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். உறவினர்கள் வருகை அல்லது உறவினர்களின் தொடர்பு போன்றவை ஏற்படும்.

புதன் -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நெருக்கமான நண்பர்களால் ஒரு சில உதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன் -
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம், அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகக் கையாளாமல் இருக்க வேண்டும்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். ஒருசிலருக்கு சிறப்புச் சலுகைகள் கிடைக்கும்.

சனி -
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை படித்து வாருங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் நிம்மதி பிறக்கும்.
*****************************


மிருகசீரிடம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
மாமன் வகை உறவினர்கள் தேவையான உதவிகளை செய்து தருவார்கள். சகோதரிகள் பண உதவி செய்வார்கள். நண்பர்களால் தொழில் அல்லது வியாபார ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் தவிப்பீர்கள். நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து யோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள்.

புதன் -
குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சண்டை சச்சரவுகள் இனி இருக்காது. குடும்பத்தினர் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். வருத்தப்பட்டு பிரிந்த நண்பரை இன்று மீண்டும் சந்தித்து நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள்.

வியாழன் -
சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
வீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்பு செலவுகள் கூடுதலாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

சனி-
கடன் தொடர்பான பிரச்சினை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஞாயிறு -
பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள். தயிர் சாதம் தானம் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
***********************************


திருவாதிரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாரம்.


பணவரவு எதிர்பார்த்ததைவிட தாராளமாக இருக்கும். அதேசமயம் செலவுகளோ எதிர்பாராத செலவுகளாக இருக்கும். திட்டமிட்டு எந்த விஷயத்திற்கும் செலவு செய்ய வேண்டும். ஆடம்பரச் செலவுகளை செய்ய வேண்டாம்.


அலுவலகப் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அவசரப்பட்டு அதிகப்படியான முதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் முன் நன்றாக படித்து அதிலுள்ள சாதக பாதகங்களை அறிந்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்கள் பதற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவர்கள் கல்வியைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக்கூடாது. கலைஞர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த வாய்ப்பையும் தவற விட வேண்டாம்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள்.


வியாழன் -
உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு காரியத்தை இன்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கவலைகள் தீரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
புற்று இருக்கும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். புளியோதரை செய்து தானம் தருவது நன்மைகளை அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

32 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்