- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அ.சா) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரக அமைப்பு உள்ளது.
10-04-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.
பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகள் மூலமாக இருந்து வந்த அழுத்தம் அகலும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுர்யமாகப் பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.
பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
*******************************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி - சுகஸ்தானத்தில் குரு (அ.சா) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக அமைப்பு உள்ளது.
10-04-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் பலவகையான யோகங்கள் வந்து சேரும்.
மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.
வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது.
வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும்.
கலைத்துறையினர் தங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலையைக் காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
*******************************
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
10-04-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-04-2021 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த வாரம் மெதுவாக இருந்த பணவரத்து அதிகரிக்கும்..
எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது.
பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள்.
தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு பணவரத்து அதிகமாகும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர் உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: குலதெய்வத்தை வியாழக்கிழமையில் வணங்கி வாருங்கள். மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
*******************************
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
வணிகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago