கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள், பிப்ரவரி 11 முதல் 17ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களைக் கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது வேகமாகும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
*******************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார். மிகப் பெரிய மாற்றங்கள் வந்து சேரும்.

வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடும். வீண்கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.

கணவன் மனைவிக்கிடையில் கருத்துவேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

எதிலும் திருப்தி ஏற்படும். பெண்களுக்கு கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
**************************
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

12ம் தேதி சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் ஐந்தாமிடத்தில் இருக்கும் கிரகக் கூட்டணி பல விதத்திலும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கிறது.

வீண் செலவுகள் குறையும். மற்றவர்களால் இருந்த மனக்கஷ்டம் அகலும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்தவொரு காரியமும் சிறப்பாக நடக்கும்.

எதிர்ப்புகளை நல்லபடியாக சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு காரியதாமதம் அகலும். அரசியல் துறையினருக்கு வீண்கவலை நீங்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: வராஹப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

5 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்