கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்;  (டிசம்பர் 31 - ஜனவரி 6ம் தேதி வரை)

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - சப்தம ஸ்தானத்தில் புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும் எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாகச் செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்லது.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தைக் குறைத்து இனிமை யாகப் பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும்.

வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு எந்தக் காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு கடன்கள் அடையும்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபட்டு வருவது காரியத் தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.
**********************

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள்.

எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும்.
நிதானமாகப் பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பேசி பழகுவது நன்மைகளைத் தரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவபெருமானை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.
*****************

கன்னி

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.

ராசிநாதன் புதன் எல்லாக் காரியங்களிலும் அனுகூலத்தைத் தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒரு வித கவலையும் இருந்து வரும்.

வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி, தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட்டு வாருங்கள். காரிய வெற்றி உண்டாகும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்