இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். புதிய வீடு கட்ட திட்டமிடு வீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மன அமைதி பெற தியானம் செய்யவும்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினையில் தெளிவு பிறக்கும்.

கடகம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கு வீர். பழையவற்றை நினைத்து கவலை வேண்டாம்.

சிம்மம்: குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். கலை பொருட்கள் சேரும்.

கன்னி: பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்த சிலரால் பிரச்சினை ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் சில மனத்தாங்கல் இருக்கும்.

துலாம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார் கள். அநாவசிய விஷயங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

தனுசு: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

மீனம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விளையாட்டாகப் பேசுவது வினையாக முடியும். எச்சரிக்கையாக இருக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 mins ago

சினிமா

22 mins ago

வாழ்வியல்

4 mins ago

தமிழகம்

40 mins ago

க்ரைம்

47 mins ago

வணிகம்

51 mins ago

சினிமா

48 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்