1 / 27
![அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) வியாழக்கிழமை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548231.jpg)
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) வியாழக்கிழமை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
2 / 27
![இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548232.jpg)
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.
3 / 27
![தென் திருப்பதி என அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ராஜகோபுரம் 120 அடி உயரம், 7 நிலைகளையுடையது. ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பில் 13.3.2022-ல் பாலாலய பூஜையுடன் தொடங்கியது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548243.jpg)
தென் திருப்பதி என அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ராஜகோபுரம் 120 அடி உயரம், 7 நிலைகளையுடையது. ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பில் 13.3.2022-ல் பாலாலய பூஜையுடன் தொடங்கியது.
4 / 27
![ராஜகோபுரத்திலுள்ள 628 சிற்பங்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் மூலம் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. ராஜகோபுரத்தில் உள்ள ஆறேகால் அடி உயரமுள்ள 7 கும்பங்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்டது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548244.jpg)
ராஜகோபுரத்திலுள்ள 628 சிற்பங்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் மூலம் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. ராஜகோபுரத்தில் உள்ள ஆறேகால் அடி உயரமுள்ள 7 கும்பங்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்டது.
5 / 27
![இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் நவ.23-ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நவ.21-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548255.jpg)
இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் நவ.23-ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நவ.21-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
6 / 27
![இன்று காலையில் கள்ளழகர் கோயில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாக சாலையில வைத்து பூஜை செய்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் 8 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை செய்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548256.jpg)
இன்று காலையில் கள்ளழகர் கோயில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாக சாலையில வைத்து பூஜை செய்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் 8 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை செய்தனர்.
7 / 27
![பின்னர் இன்று அங்கிருந்து காலையில் 9.15 மணியளவில் கடங்கள் ராஜகோபுரம் நோக்கி புறப்பாடானது. ராஜகோபுரத்திற்கு சுமார் 9.45 மணியளவில் 7 கும்பங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548267.jpg)
பின்னர் இன்று அங்கிருந்து காலையில் 9.15 மணியளவில் கடங்கள் ராஜகோபுரம் நோக்கி புறப்பாடானது. ராஜகோபுரத்திற்கு சுமார் 9.45 மணியளவில் 7 கும்பங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
8 / 27
![பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்கினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 16 இடங்களில் சுழல்கருவிகள் வசதி செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின் போது 3 கருடன் வானில் வட்டமிட்டது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548268.jpg)
பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்கினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 16 இடங்களில் சுழல்கருவிகள் வசதி செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின் போது 3 கருடன் வானில் வட்டமிட்டது.
9 / 27
![ஆன்மிக சொற்பாழிவாளர் மங்கையர்க்கரசி கோயிலின் சிறப்புகள் பற்றி வர்ணனை செய்தார்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz17007548279.jpg)
ஆன்மிக சொற்பாழிவாளர் மங்கையர்க்கரசி கோயிலின் சிறப்புகள் பற்றி வர்ணனை செய்தார்.
10 / 27
![விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075482710.jpg)
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர்.
11 / 27
![மதுரை மாவட்ட எஸ்பி எஸ். சிவ பிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075482811.jpg)
மதுரை மாவட்ட எஸ்பி எஸ். சிவ பிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
12 / 27
![தகவல்:சுப.ஜனநாயகசெல்வம்
| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075482812.jpg)
தகவல்:சுப.ஜனநாயகசெல்வம்
| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075482913.jpg)
14 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075482914.jpg)
15 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483015.jpg)
16 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483016.jpg)
17 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483117.jpg)
18 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483118.jpg)
19 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483119.jpg)
20 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483220.jpg)
21 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483221.jpg)
22 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483222.jpg)
23 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483223.jpg)
24 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483224.jpg)
25 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483225.jpg)
26 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483226.jpg)
27 / 27
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2023/11/23/4041/thumb/xyz170075483227.jpg)