தீபத் திருவிழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலர்கள், பழங்கள், கரும்பு, வாழை மரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
ஏகன் - அநேகன் என பஞ்ச பூதங்களும் நானே என்பதை விளக்கும் விதமாக, மூலவர் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.