Published on : 05 Oct 2022 13:36 pm

குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு

Published on : 05 Oct 2022 13:36 pm

1 / 16
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்.05) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் குவிகின்றனர். | படங்கள்: ரகுநாதன்
2 / 16
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஆண்டு தோறும் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
3 / 16
இந்த ஆண்டு இத்திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடம் தரித்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் குடில் அமைத்து கலை நிகழ்ச்சிகளை வீதி தோறும் நடத்தியும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
4 / 16
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்.5) நள்ளிரவு நடைபெறுகிறது.நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன் எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்வார்.
5 / 16
பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதை பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்வர்.
6 / 16
நாளை (அக்.6) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு சாந்தாபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
7 / 16
அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும்.
8 / 16
தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
9 / 16
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16

Recently Added

More From This Category

x