லாரி மோதி சித்த மருத்துவ மாணவர் உயிரிழப்பு :

லாரி மோதி   சித்த மருத்துவ மாணவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரது மகன் செல்வமணி (23). இவர், விடுதியில் தங்கியிருந்து திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று திருநெல்வேலி டவுனுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டு, வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த செல்வமணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in