TAPS: திமுகவுக்கு தேர்தலில் ‘பலன்’ சந்தேகமா?

கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்வூதியத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், நான்கு ஆண்​டு​களுக்​கும் மேலாக இதற்​காக பல்​வேறு போராட்​டங்​களை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் நடத்​தி​யும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் கிணற்​றில் போட்ட கல்​லாகவே கிடந்​தது.

தற்​போது, தேர்​தல் நெருங்​கும் நிலை​யில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் குதிக்​கும் சூழல் ஏற்​பட்​ட​தால், ககன்​தீப் ​சிங் பேடி தலை​மையி​லான குழு​வின் பரிந்​துரைப்​படி, TAPS என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்வூதிய திட்​டத்தை’ முதல்​வர் ஸ்டா​லின் ஜனவரி 3-ல் அறி​வித்​தார். இதனிடையே, தேர்​தலில் அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்​டு​களை கவர்​வதற்​காக இந்​தத் திட்​டத்தை அறி​வித்​திருப்​ப​தாக விமர்​சனங்​கள் எழுந்துள்ளன.

இந்த திட்​டத்​தில், ஊழியர்​கள் பெற்ற கடைசி மாத ஊதியத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​படும். இதற்கு பணி​யாளர்​களின் பங்​களிப்​பாக ஊதி​யத்​தில் 10 சதவீதம் பிடிக்​கப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரருக்கு 6 மாதங்களுக்கு ஒரு​முறை அகவிலைப்​படி உயர்த்​தப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரர் இறந்​து​விட்​டால் அவர் பெற்​று​வந்த ஓய்வூதி​யத்​தில் 60 சதவீதம் குடும்ப உறுப்​பினருக்கு ஓய்வூதி​ய​மாக தரப்​படும். பணிக்​காலத்​தில் இறந்​தால் ரூ.25 லட்​சம் வரை பணிக்​கொடை அளிக்​கப்​படும் என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன.

இந்​நிலை​யில், 23 ஆண்​டு ​கால கோரிக்​கையை பூர்த்தி செய்​யும் தமிழக அரசின் முயற்​சியை வரவேற்​ப​தாக ஜாக்டோ - ஜியோ, போட்டா - ஜியோ ஆகிய பிர​தான கூட்டமைப்​பு​கள் வரவேற்​றுள்​ளன. அதேசம​யம், மற்​றொரு தரப்​பினர் கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தி மீண்​டும் போராட்​டங்​களை அறி​வித்​துள்ளனர். ஜாக்​டோ - ஜியோ அமைப்​பிலும் டாப்ஸ் திட்​டத்​துக்கு எதி​ரான குரல்​கள் வலுக்​கின்​றன. இது குறித்​தான சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் பகிர்ந்த கருத்துகளைப் பார்ப்போம்.

“தமிழக அரசின் புதிய ஒய்​வூ​தி​யத் திட்​டம் என்​பது ஏமாற்று வேலை. இதில் அரசின் பங்​களிப்பு இல்​லை. உறுதி​யளித்​த​படி பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நிறைவேற்​றாமல் இருப்​பது ஏற்​புடையதல்ல. அரசால் லாபமடைந்த குறிப்​பிட்ட சில சங்​கங்​கள் மட்​டுமே இதை ஆதரிக்​கின்​றன. இதை​விட மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் கூடு​தலான சிறப்பம்சங்​கள் உள்​ளன. நீதிப​தி​கள், எம்​எல்ஏ, எம்பிக்களுக்கு பங்​களிப்பு இல்​லாத ஓய்​வூ​திய திட்​டமே அமலில் உள்​ளது.

ஆனால், பல ஆண்​டு​களாக அரசுக்​காக பணி​யாற்றி ஒய்வு பெறு​பவர்​களுக்கு அவர்​களிடம் பிடித்த பணத்​தையே வைத்து பலன்​களை அளிப்​பது நியாயமற்ற செய​லாகும். இந்​தத் திட்​டத்​தில் ஓய்​வு​பெறு​பவர்​களுக்கு பணிக்​கொடை மற்​றும் முறை​யான ஓய்​வூ​தி​யம் கிடைக்க வழியில்​லை. பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தையே அமல்படுத்த வேண்​டும்” என்று பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாக்​டோ - ஜியோ உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் சி.​முரு​கன் கூறும்போது, “சிபிஎஸ் திட்​டத்​தில் ஊழியர்​கள் மற்​றும் அரசின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து மொத்​த​மாக எங்​களிடம் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால் இதில், ஊழியர்​களின் பங்​களிப்பு தொகை எப்​படி திரும்ப வழங்கப்​படும் என்​பது குறித்து தெளி​வில்​லை. அதே​போல், நிதிப் பற்​றாக்​குறை ஏற்​பட்​டால் மட்​டுமே 13 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு செல​விடும் என்​பதும் சரியல்ல.

ஏனெனில், ஊழியர்​களின் பணம் 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அதற்​கான வட்டி மற்​றும் கமிஷன் விவரங்​கள் வெளிப்படை​யாக இல்​லை. ஜாக்​டோ - ஜியோ​வில் உள்ள சில சங்​கங்​கள், அரசுக்கு ஆதரவு தெரிவித்​தா​லும், பல சங்​கங்​கள் எதிர்ப்​பில் உள்​ளன. அரசாணை வந்​ததும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர திட்​ட​மிட்​டுள்​ளோம். ராஜஸ்​தான் உள்​ளிட்ட 7 மாநிலங்​கள் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்படுத்திய நிலை​யில், பொருளா​தா​ரத்​தில் முன்னேறிய தமிழக அரசும் அதை அமல்​படுத்த வேண்டும். இல்​லை​யெனில் தேர்​தலில் தாக்​கத்தை ஏற்படுத்​தும்” என்றார் சி.​முரு​கன்.

போட்டா - ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர் த.அமிர்தகுமார் கூறும்போது, “TABS திட்​டத்​தில் சில குறைபாடு​கள் இருப்​பினும் அதை வரவேற்​கி​றோம். எங்களின் 23 ஆண்​டு ​கால போராட்​டத்​துக்​குப் பின்​பு, மாதாந்​திர ஓய்​வூ​தி​யம் கிடைப்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. ஒட்டுமொத்த தொகை​யாக கிடைப்​ப​தை​விட, வாழ்​நாள் முழு​வதும் கிடைக்​கும் மாத ஓய்​வூ​தி​யமே பாதுகாப்பானது. தற்​போதைய முடிவை 90 சதவீத வெற்றியாக கருதுகி​றோம்.

அதே​போல், நிதிப் பற்​றாக்​குறை​யால் ஊழியர்​களின் 10 சதவீத பங்​களிப்பை குறைக்க முடி​யாது என்று அரசு தெரிவிக்​கிறது. எனினும், ஊழியர்​களின் பங்​களிப்பை ரத்து செய்து முழு​வதும் அரசே ஏற்க வேண்​டும். மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஒய்​வூ​தி​யத் திட்​டத்​தில் இருப்​பது போல், ஓய்வு பெறும்​போது கிடைக்​கும் மொத்​தத் தொகை அல்​லது முன்​பணம் எடுக்​கும் வசதி இதில் இல்​லை. இது சரிசெய்​யப்பட வேண்​டும்” என்றார் த.அமிர்​தகு​மார்.

இதற்​கிடையே, பல்​வேறு சங்​கங்​கள் மீண்​டும் போராட்டத்தில் குதிக்​க​வும் ஆயத்​த​மாகி வரு​கின்​றன. மறு​புறம் அரசு ஊழியர்​களை அரவணைக்​கும் வித​மான தேர்​தல் வாக்​குறு​தி​களை வழங்க அதி​முக-​வும் திட்டமிட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் தேர்​தலை மைய​மாக வைத்து திமுக மேற்​கொண்ட இந்த நடவடிக்கை​யானது அவர்​களுக்கு கை​கொடுக்​குமா என்பதே கேள்​விக் குறி​யாகியுள்​ளது.

TAPS: திமுகவுக்கு தேர்தலில் ‘பலன்’ சந்தேகமா?
ஜனநாயகன் முதல் அரசன் வரை: கோலிவுட் 2026-ன் ‘மெகா’ லிஸ்ட்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in