புதிய கட்சி தொடக்கம்... சசிகலா சொன்ன ‘ஃப்ளாஷ்பேக்’

முன்னாள் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, 2017-ல் ஊழல் வழக்கில் சிறை சென்றதால், அந்தப் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அதன்பின் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

2021-ல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை. அதன் பின்னரும் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஓரணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என கூறி அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் இணைக்கப்படுவர் என எதிர்பார்த்தனர். ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்.

அமைதியாக இருந்த சசிகலா, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். கடந்த அண்ணா பிறந்தநாளின்போது திமுகவை வீட்டுக்கு அனுப்பி மக்கள் விரும்பும் ஆட்சியை கொண்டு வருவேன் என்றார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை வழக்கமாக்கினார். அதிமுகவில் தனக்கு இடமில்லை எனத் தெரிந்துவிட்டதால் சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தது இப்போது நிஜமாகியிருக்கிறது.

ராம​நாத​புரம் மாவட்​டம் பசும்​பொன் கோட்​டைமேடு பகுதியில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் பிறந்த நாளை முன்​னிட்டு அதி​முக முன்​னாள் பொதுச் ​செயலாளர் வி.கே.சசிகலா தலை​மை​யில் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடை​பெற்​றது. இதில், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த சசிகலா, அண்ணா - எம்ஜிஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்வில் சசிகலா பேசிய சில ஃப்ளாஷ்பேக் விஷயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. “ஜெயலலிதா மரணத்​தில் அரசி​யல் செய்​தனர். இதில் எதிரி​கள் என்​னென்ன கதைகள் கட்​டி​விட்​டனர். ஜெயலலிதா மறைந்த அன்று இரவு மந்​திரி​கள், எம்​எல்​ஏ.க்​கள் வந்து நீங்​கள்​தான் முதல்​வ​ராக​வும், பொதுச் ​செய​லா​ள​ராக​வும் ஆக வேண்டும் என்​றனர். ஆனால் நான், ஜெயலலி​தாவுக்கு காரி​யம் செய்ய வேண்​டிய​திருக்​கிறது. முன்​பு​போல் பன்னீர்​செல்​வமே முதலமைச்​ச​ராக இருக்​கட்​டும் என்றேன்.

முதலமைச்​ச​ரான பன்​னீர்​செல்​வம் மீது அமைச்​சர்​கள் என்னிடம் தின​மும் வந்து குறை​கள் சொன்​னார்​கள். பிரச்சினை​கள் புகைந்​த​தால் தடுக்க நான் முதல்​வ​ராக ஒப்புக்​கொண்​டேன். அவரை​யும் கேட்​டுத்​தான் முடிவு எடுத்​தேன். பின்​னர் பன்​னீர்​செல்​வத்​திற்கு என்ன ஆனது தெரிய​வில்​லை. யாரோ சொல்​லி, ஜெயலலிதா சமா​திக்கு சென்று தர்​ம​யுத்​தம் நடத்​தி​னார். தற்​போது அதுவே அவருக்கு சிக்​கலாகி விட்​டது.

அதைத் தொடர்ந்து அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் நான் வேண்​டாம் என்று சொல்​லி​யும் என்னை தொந்​தரவு பண்ணி பொதுக்​குழுவை கூட்டி பொதுச்​செய​லா​ள​ராக நியமனம் செய்​தனர். நான் முதலமைச்​ச​ராக கடிதம் கொடுத்​த​போது ஆளுநர் அங்கு இல்​லை. கடிதம் கொடுத்தவுடன் நீதி​மன்ற தீர்ப்பு சொல்லி வைத்​தார்​போல் சீக்​கிர​மாக வந்​தது. அதற்​கெல்​லாம் நான் பயப்படவில்லை. அதி​முக அரசை கலைக்​க​விடக் கூடாது, பழனி​சாமியை முதலமைச்​ச​ராக அமர​வைத்து விட்டு ஜெயிலுக்கு போக வேண்​டும் என உடனடி முடிவெடுத்தேன்.

புதிய கட்​சியை விரை​வில் ஆரம்​பிக்​கப் ​போகிறோம். இது ஒரு ​தி​ரா​விட கட்​சி​யாக அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா வழி​யில் ஏழை எளிய சாமானிய மக்​களுக்கு ஆதர​வாக​வும் கட்சி இருக்​கும். எதிரி​கள், துரோகி​களை வேரறுக்​கும் கட்சி​யாக அது இருக்​கும். தற்​போது கட்சி கொடியை மட்டும் அறி​முகம் செய்​கிறேன். கருப்பு வெள்ளை சிவப்பு வண்​ணத்​தில் அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வம், அந்தக் கொடி​யில் இருக்​கும். கட்​சி​யின்​ பெயரை மட்​டும்​ விரை​வில்​ அறிவிக்​கிறேன்​” என்றார் சசிகலா.

புதிய கட்சி தொடக்கம்... சசிகலா சொன்ன ‘ஃப்ளாஷ்பேக்’
சாமானிய மக்களின் தோழர் நல்லகண்ணு - ஓர் உறு​தி​மிக்க தலைவரின் அரசியல் பயணம்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in