எப்படி இருக்கிறது தேமுதிகவினர் மனநிலை? - ஒரு விரைவுப் பார்வை

“தேர்​தலில் யாருடன் கூட்​டணி என்​பதை மாநாட்​டில் அறிவிப்​போம்” என பிரேமலதா பிரகடனம் செய்திருப்பதால் தேமு​தி​கவின் கடலூர் மாநாட்டை அனைத்​துக் கட்​சிகளுமே ஆவலுடன் எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றன. கடலூர் மாவட்​டம் வேப்​பூரை அடுத்த பசார் கிரா​மத்​தில், ‘மக்​கள் உரிமை மீட்பு மாநாட்டை’ ஜனவரி 9-ம் தேதி நடத்​துகிறது தேமு​திக. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்​சாலை​யில் 130 ஏக்​கர் பரப்​பில் மாநாட்டு பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்டி வரு​கின்​றன.

‘எம்​மத​மும் சம்​மதம்’ என்​ப​தைச் சொல்​லும் வித​மாக மும்​மதங்​களின் அடை​யாளங்​கள் மாநாட்டு முகப்​பில் வைக்கப்பட்​டுள்​ளன. விஜயகாந்த் பொது​மக்​களுக்கு வழங்​கிய நலத்​திட்​டங்​கள் குறித்த புகைப்​படங்​கள், அவரது முழு உருவப் படங்​கள் மாநாட்​டுத் திடலை அலங்கரிக்​கின்​றன. மாநாட்டு ஏற்​பாடு​களைப் பார்ப்பதற்காக பக்​கத்து மாவட்​டங்​களில் இருந்து வந்திருந்த தேமு​தி​க-​வினருடன் பேச்​சுக் கொடுத்​தோம்.

அப்​போது, “யாருடன் கூட்​டணி வைக்​கலாம் என எங்க அண்​ணி​யார் கருத்​துக் கேட்​டுருக்​காங்க. நாங்க எல்​லாம் திமுக கூட்​டணி தான்னு உறு​தியா சொல்​லிட்​டோம். பெரும்​பாலான மாவட்​டச் செய​லா​ளர்​களின் விருப்​ப​மும் அது​தான். அதனால், அநேகமா திமுக-வுடன் கூட்​ட​ணின்னு தான் அண்​ணி​யார் அறி​விப்​பாங்க. கேப்​டன் இருந்திருந்தால் இப்ப அவரு தான் கிங் மேக்​கரா இருந்திருப்​பாரு” என்​ற​னர் தேமுதிகவினர்.

மாநாட்​டுப் பணி​களில் மும்​முர​மாக இருந்த கடலூர் மாவட்ட தேமு​திக செய​லா​ளர் பண்​ருட்டி சிவக்கொழுந்துவிடம் பேசினோம். “மாநாட்டு பணி​கள் ஓரிரு நாளில் முடிந்து விடும், இடை​யில் மழை குறுக்கிட்டதால், சற்று பணி​யில் தொய்வு இருந்​தது. மாநிலம் முழு​வ​தி​லும் இருந்து தொண்​டர்​கள் வரு​வ​தால். அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன” என்​றார்.

எந்​தக் கூட்​ட​ணிக்கு செல்​லலாம் என்று நீங்​கள் விரும்புகிறீர்​கள் என்று கேட்​டதற்​கு, “அது அண்​ணி​யார் மட்​டுமே அறிய​வேண்​டியது. எங்​கக்​கிட்ட கேட்​டதுக்கு நாங்க சொல்ல வேண்​டியதை சீட்டு மூலமா சொல்லி இருக்​கி​றோம்” என்​றார். மாநாட்டு செல​வு​கள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட தேமு​திக நிர்​வாகி​கள், “தலைமை ஒரு தொகை கொடுத்​தது. மற்​றபடி நிர்வாகிகள் எல்​லாம் சேர்ந்து கொஞ்​சம் தொகை போட்டு செய்​கி​றோம். தேமு​திக தொண்​டர்​கள் எப்​போதும் வீறு கொண்டு எழக்கூடியவர்​கள், தன்​னெழுச்​சி​யாக வருவார்கள் என நம்​பு​கி​றோம்” என்​ற​னர்.

வேலூரில் இருந்து வந்​திருந்த தேமு​திக நிர்​வாகி ஒரு​வர், “கேப்​டன் காலத்​தில் இருந்த வேகம் இப்​போது இல்லை என்பது உண்மைதான். கூட்​டணி தொடர்​பாக​வும் தீர்க்கமான முடிவு இல்​லை. ஒவ்​வொரு முறை​யும் கடைசி நேரத்​தில்தான் முடிவு எடுக்கிறார்கள். இப்​ப​வும் இது தாமதம்தான். இந்​நேரம் கூட்​ட​ணியை அறிவித்திருந்தாலாவது, கூட்​ட​ணி​யில் உள்ள பெரிய கட்சிகளின் மாவட்​டச் செய​லா​ளர்​கள் உதவி செய்வார்கள். கடந்த 10 ஆண்​டு​களாக எந்​தப் பொறுப்​பும் இல்​லாத​தால் வரு​மானத்​துக்கு வழி​யில்​லாமல் இருக்கிறோம். அதனால் மாநாட்​டுக்கு எப்​படி ஆட்​களைத் திரட்​டப் போகி​றோம் என்று புரி​யாமல் நிர்​வாகி​கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்​கி​றார்​கள்” என்​றார் அந்த தேமுதிக நிர்வாகி.

எப்படி இருக்கிறது தேமுதிகவினர் மனநிலை? - ஒரு விரைவுப் பார்வை
ஜனநாயகன் முதல் அரசன் வரை: கோலிவுட் 2026-ன் ‘மெகா’ லிஸ்ட்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in