வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசை பட்​டியலில் 26-வது இடத்​தில் இருக்கும் வேளச்​சேரி தொகு​தி, தொகுதி மறுசீரமைப்​புக்​குப் பின், கடந்த 2011-ம் ஆண்டு உருவானது. இத்தொகு​தி​யில் வேளச்​சேரி, விஜயநகர், அடை​யாறு கிழக்கு மற்​றும் மேற்​கு, திரு​வான்​மியூர் கிழக்கு மற்​றும் மேற்கு, தரமணி, பெசன்ட்​நகர் பகு​தி​கள் உள்​ளன.

சென்​னை​யில் உள்ள 16 தொகு​தி​களில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகு​தி​யில் 2-வது இடத்​தில் வேளச்சேரி தொகுதி உள்​ளது. வேளச்​சேரி​யின் முக்​கிய அடை​யாள​மாக ஆசி​யா​வில் மிகப்பெரிய ஷாப்​பிங் மாலான ஃபீனிக்ஸ்மால், பறக்​கும் ரயில் நிலை​யம் திகழ்கிறது.

வேளச்சேரி தொகு​தி​யில் தாழ்த்​தப்​பட்​டோர், நாயக்​கர் சமுதாய மக்​கள் அதிக அளவில் வசித்து வரு​கின்​றனர். இவை தவிர, தொகு​தி​யில் கிராமணி, முதலி​யார், பிராமணர் மற்​றும் கிறிஸ்​து​வர்​களும் வசிக்​கின்​றனர். மழைக் காலங்​களில் வேளச்​சேரி, தரமணி பகு​தி​கள் தண்ணீரில் மூழ்​கும் நிலை பெரும் பிரச்​சினை​யாக இருக்கிறது.

குடி​யிருப்​பு​கள் சுற்​றி​லும் மழைநீர் தேங்​கு​வ​தால் சில நாட்களுக்கு மக்​கள் வீட்​டுக்​குள் முடங்​கும் நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட கட்​டமைப்​பு​கள் இருந்​தா​லும், மழைக் காலங்​களில் மக்​கள் அவதிக்குள்ளாவது நீடிப்​ப​தால், இந்த பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்​டும் என்​பது மக்​களின் நீண்​ட​கால கோரிக்​கை​யாகவே உள்​ளது.

அதே​போல், சோழிங்​கநல்​லூர் தொகு​திக்​குட்​பட்ட பெருங்குடி​யில் உள்ள குப்​பைக் கிடங்​கால் வேளச்​சேரி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல்​வேறு நோய்​களால் பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ளது. இந்த பிரச்​சினைக்கு தீர்வு காணு​மாறு மக்​கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர்.

வேளச்​சேரி தொகு​தி​யில் வசிப்​பவர்​கள் பெரும்பாலானோர் ஐடி நிறு​வனங்​களில் பணி​யாற்றி வருகின்​றனர். ஐடி நிறு​வங்​களில் பணி​யாற்​று​பவர்​கள், அரசு ஊழியர்​கள், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள் என தினமும் ஆயிரக்​கணக்​கானோர் வேளச்​சேரி, தரமணி ரயில் நிலை​யத்​தில் இருந்​து, பறக்​கும் ரயில்​களில் பயணம் செய்து வரு​கின்​றனர். இந்த ரயில் நிலை​யங்​களில் வாகன நிறுத்​தும் இடங்​களை முறைப்​படுத்​தி, பாது​காப்பை அதிகரிக்க வேண்​டும் என்று மக்​கள் கோரிக்கை வைத்து வரு​கின்​றனர்.

வேளச்​சேரி தொகுதியில் முதல் முறை​யாக 2011-ம் ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட எம்​.கே.அசோக் வெற்றி பெற்​றார். கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் சார்பில் போட்​டி​யிட்ட அசன் மவுலானா 68,493 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​ரார்.

இந்த தேர்​தலில், வேளச்​சேரி தொகு​தி​யில் திமுக கூட்டணியில் காங்​கிரஸ் சார்​பில் அசன் மவுலா​னா, அதிமுக சார்​பில் எம்​.கே.அசோக், தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) சார்​பில் ஆர்​.கு​மார், நாம் தமிழர் கட்சி சார்​பில் கீர்த்​தனா ஆகியோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

காங்​கிரஸ் வேட்​பாளர் அசன் மவுலா​னா, அதி​முக வேட்பாளர் எம்​.கே.அசோக் ஆகியோர் ஏற்​க​னவே, இந்த தொகு​தி​யில் நின்று வெற்றி பெற்​றுள்​ள​தால், இந்த தேர்தலில் இரு​வருக்​கும் இடையே கடும் போட்டி நில​வு​கிறது.

அதே​நேரம், தவெக வேட்​பாளர் ஆர்​.கு​மாருக்கு இளைஞர்கள், குறிப்​பாக, பெண்​களின் ஆதரவு அதி​கம் உள்​ளது. நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் எம்​.கீர்த்​த​னா, இந்த தொகு​தி​யில் கடந்த தேர்​தலில் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​த​தால், இந்த முறை வெற்றி பெறு​வதற்​காக தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்​.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,02,235

பெண் - 1,09,411

மூன்​றாம் பாலினத்​தவர் - 45

மொத்த வாக்​காளர்கள் - 2,11,691

வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள் - முந்துவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in