திமுக + அதிமுக ‘முயற்சி’... உண்மையை உடைத்தாரா எம்.ஏ.பேபி?

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்டிலில் அமரமுடி​யாமல் விஜய் அல்​லாடிக் கொண்டிருந்த வேளையில், அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்திருப்பதாக தகவல்​கள் தடதடக்க ஆரம்பித்தன.

திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் அதி​முக. இந்த இரண்டு கட்​சிகளும் எதிரெ​திர் துருவங்களாக நிற்​பது​தான் இரண்டு கட்சிகளுக்​குமே நல்​லது. அப்படி இருப்​ப​தால் மட்​டுமே கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த இரண்டு கட்சிகள் மட்​டுமே மாறி மாறி ஆட்​சி​யைப் பிடித்து வருகின்​றன. இதனால் இவர்​களிடம் ஐம்​பது வருடங்களுக்கு முன்பு ஆட்​சியை பறி​கொடுத்த காங்கிரஸால் அதற்​குப் பிறகு எழவே முடிய​வில்​லை.

இந்த நிலை​யில்​தான், திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக பாஜக தமிழகத்​தில் தலை​தூக்​கியது. ஆனால், அந்​தக் கட்சி​யாலும் இப்போது வரைக்​கும் திரா​விடக் கட்​சிகள் தயவில்​லாமல் முன்னுக்கு வரமுடிய​வில்​லை. என்றபோதும், விஜய்​யின் வரவால் இம்​முறை திரா​விடக் கட்​சிகளின் தலைமை இல்​லாத ஓர் அரசாங்கம் தமிழகத்தில் அமை​யும் சூழல் உரு​வானது. அந்த வகையில், காங்​கிரஸ், பாஜகவால் சாதிக்க முடியாத இந்த அதிச​யத்தை சாதித்​துக் காட்டி இருக்​கிறார் விஜய். இருந்தபோதும், அறு​திப் பெரும்​பான்​மைக்​காக, இப்​போது திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற கட்​சிகளின் தயவை நாட வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்பட்டது.

இதனிடையேதான், திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்சியமைக்க ஆலோ​சனை நடப்​ப​தாக புதன்கிழமை ஒரு செய்தி காட்​டுத் தீயாய் கசிந்தது. இதைத் தொடர்ந்து விஜய்க்கு அளிக்​கப்​பட்​டிருந்த போலீஸ் கான்​வாய் விலக்கப்​பட்​டதும் பல்​வேறு ஊகங்​களுக்கு வழி​வகுத்​தது.

இது குறித்து நம்​மிடம் பேசிய திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர், “இந்​தத் தேர்​தலில் திமுக கூட்​டணி தோற்​றதை​விட தனது தந்தை ஸ்டா​லின் தோற்​றதை உதயநிதி ஸ்டாலினால் ஜீரணித்​துக் கொள்ள முடிய​வில்​லை. என்னவிலை கொடுத்​தாவது இதை சரிசெய்ய வேண்​டும் என்​ப​தில் தீவிர​மாய் இருக்​கிறார் உதயநி​தி. அதி​முக உடன் திமுக கைகோர்க்​கிறது என்ற செய்​தி​யும் உதயநிதி தரப்​பில் இருந்தே கசிந்​திருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுனுடன் உதயநிதி பேசியதாகவும் சொல்கிறார்​கள்.

திரா​விடக் கட்​சிகளுக்கு மாற்​றாக காலூன்றி இருக்​கும் விஜய், ஆட்​சி​யில் அமர்ந்​தால் திரா​விடக் கட்​சிகளில் ஒன்று நிச்​ச​யம் காணா​மல் போய்​விடும். ஏற்​கெனவே கரைந்து கொண்​டிருக்​கும் அதி​முக அந்த இடத்​துக்கு தள்ளப்பட நிறையவே வாய்ப்​பிருக்​கிறது. இதையெல்​லாம் உணர்ந்​தே, அதி​முக தரப்​பிலும் ‘தி​முக ஆதர​வுடன் அதிமுக ஆட்சி’ என்ற செய்​தி​களை யாரும் அழுத்தம் திருத்தமாகவும் அதிகாரபூர்வமாகவும் இரு தினங்களாக மறுக்​க​வில்​லை.

திமுக - அதி​முக ஆட்சி குறித்த செய்​தி​களை டெல்லி பாஜக தலை​மை​யும் ரசிக்க ஆரம்​பித்​திருக்​கிறது. அதற்குக் காரணம், விஜய்க்கு காங்​கிரஸ் ஆதர​வுக் ‘கரம்’ நீட்டியிருப்​பது. விஜய் செல்​வாக்​கில் தமிழகத்​தில் மீண்டும் காங்​கிரஸ் தலை​தூக்கி விடக்​கூ​டாது என்​ப​தில் கவன​மாக இருக்​கிறது பாஜக. அதன் காரண​மாகவே, அறுதிப் பெரும்​பான்மை எம்​எல்​ஏ-க்​களின் பட்​டியலைக் கேட்டு விஜய்யை ஆட்சியமைக்க அழைக்​காமல் இழுத்தடித்தாராம் ஆளுநர்.

விஜய் ஆட்​சிக்கு வராமல் தடுப்​ப​தற்​காக பழனி​சாமியை வெளி​யில் இருந்து ஆதரிக்​கும் முடிவுக்கு திமுக வந்திருப்பதாக சொல்​பவர்​கள், இது தொடர்​பாக டெல்லியின் அனு​ம​தி​யோடு அதி​முக சில மூவ்​களை எடுத்து வரு​வதாகவும் கூறினர். அதன்காரணமாகவே, புதுச்சேரி சென்ற பழனி​சாமி அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த அதி​முக எம்​எல்​ஏ-க்​களிடம் ஆலோ​சனை நடத்​தி​னார். திமுக ஆதரவு குறித்து அப்போது பேசியிருக்கிறாராம்.

விஜய்க்கு ஆட்​சி​யமைக்க வாய்ப்பு அமை​யாத காரணத்தால் நாங்கள் பழனி​சாமிக்கு நிபந்​தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் என திமுக தரப்​பில் விளக்​கம் கொடுக்​கப்​படலாம். தங்​களின் இந்த முடி​வால் விஜய்யை ஆட்​சி​யமைக்க முடி​யாமல் தடுத்​து​விட முடி​யும் என நம்புகிறார் உதயநி​தி. அதே​போல், பழனிசாமி​யும் ஆட்சி அதி​காரத்தை கைப்​பற்​று​வ​தால் அதி​முக-வை பிள​வில் இருந்து காப்​பாற்ற முடியும் என நினைக்​கிறார்” என்கிறார்கள் திமுக உள்​வட்ட நிர்​வாகி​கள் சிலர்.

யாருமே நினைத்​துக்​கூட பார்க்க முடி​யாத அதி​முக ஆட்சி திமுக ஆதர​வில் அமை​யு​மா... திமுக எதிர்ப்​பிலேயே வளர்ந்த அதி​முக-​வின் எம்​எல்​ஏ-க்​கள் அத்​தனை பேரும் ஒரே​முக​மாய் இதை ஏற்​பார்​களா... அல்​லது திமுக உறவை காரணம் காட்டி அதி​முக-​வில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி​கள் எல்லாம் எழுந்த வேலையில்தான் இந்தக் கூட்டு முயற்சியின் உண்மைத் தனமையை உடைத்துச் சொல்லியிருக்கிறார் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்திய பொதுச்​ செய​லா​ளர் எம்​.ஏ.பேபி.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எங்​களது மாநில தலை​வர்​கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி​ய​போது, திமுக ஆதர​வுடன் ஒரு அரசை அமைப்​பது குறித்த யோசனை முன்​வைக்​கப்​பட்​டது. அதாவது, அதிமுக தலை​மையி​லான அரசை திமுக வெளியில் இருந்து ஆதரிக்க இருப்​ப​தாக தெரி​வித்​தனர். மற்ற விவரங்​கள் எதை​யும் எங்​களிடம் கூற​வில்​லை.

ஆனால், திமுக என்ன செய்ய விரும்​பு​கிறது என்​பதை எங்களிடம் நியாய​மான முறை​யில் கலந்தாலோ​சித்​தனர். அதை நாங்​களும் ஆதரிக்க வேண்​டும், அவர்​களது அணுகு​முறையை நாங்​களும் பின்​பற்ற வேண்​டும் என்று திமுக விரும்பியது. நாங்​கள் திமுகவை எதிர்க்​கப் போவ​தில்​லை. ஆனால், பாஜக கூட்​ட​ணி​யில் ஒரு அங்​க​மாக இருந்த அதிமுகவை ஆதரிக்​கும் அரசி​யல் முடிவை எங்​களால் ஏற்றுக்​கொள்ள முடியாது.

தேர்​தலில் அதி​முக தோல்​வியடைந்து விட்​டது. திமுக​வும் தோல்​வியடைந்துவிட்​டது. நாங்​கள் திமுக கூட்டணியில் ஒரு அங்​க​மாக இருந்​தோம். அதனால் நாங்​களும் தோற்​று​விட்​டோம். அந்​தவகை​யில், நாங்​கள் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, தமிழக சட்​டப்​பேர​வை​யில் தனிப்​பெரும் கட்​சி​யாக உருவாகிய தவெக​வுக்கு எங்​கள் ஆதரவை வழங்​கி​யிருக்​கிறோம்” என்றார் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்திய பொதுச்​ செய​லா​ளர் எம்​.ஏ.பேபி.

ஆனால், அவரே மறுதினம் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதாக முயற்சிகள் நடந்ததாக சொல்லப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க சில நகர்கவுகளை முன்னெடுத்தது உண்மை” என்று விளக்கம் அளித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

திமுக + அதிமுக ‘முயற்சி’... உண்மையை உடைத்தாரா எம்.ஏ.பேபி?
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in