ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி உஸ்​மான் மொய்​தீன் அறிவிப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: ரமலான் நோன்பு பிப்​.19-ம் தேதி (இன்​று) முதல் தொடங்​கு​வ​தாக அரசு தலைமை காஜி உஸ்​மான் மொய்​தீன் அறி​வித்​துள்​ளார்.

இஸ்​லாமியர்​களின் 5 முக்​கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் முக்​கிய​மான ஒன்​றாகும். ரமலான் மாதத்​தின் முந்​தைய மாதத்​தில் வானில் தோன்​றும் பிறை​யின் அடிப்​படை​யில் ரமலான் நோன்பு தொடர்​பான அறி​விப்பு வெளி​யிடப்​படும். அந்த வகை​யில், பிப்​.19-ம் தேதி (இன்​று) முதல் ரமலான் நோன்பு தொடங்​கு​வ​தாக அரசு தலைமை காஜி என்​.பி.உஸ்​மான் மொய்​தீன் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறியிருப்பதாவது: பிப்​.18-ம் தேதி மாலை தமிழகத்​தின் பல பகு​தி​களில் புனித ரமலான் மாதத்​துக்​கான முதல் பிறை தென்​பட்​டது. இதைத் தொடர்ந்து பிப்​.19-ம் தேதி முதல் புனித ரமலான் மாதத்​தின் முதல் நோன்பு தொடங்​கும். இவ்வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, இஸ்​லாமிய மக்​கள் இன்று முதல் நோன்பு நோற்​பார்​கள். 30 நாட்​கள் நோன்​பை முடித்து, நிறைவு நாளில் ரமலான் பண்​டிகை கொண்​டாடப்படும்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை? - மத்திய அரசு பரிசீலனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in