சென்னையில் பறவைக் காய்ச்சல் அச்சமும், ‘அலர்ட்’ குறிப்புகளும்

சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், அவை H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறை மற்றும் கால்நடைத் துறை இணைந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இது குறித்த அலர்ட் குறிப்புகளை விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

சென்னையில் பறவைக் காய்ச்சல் அச்சமும், ‘அலர்ட்’ குறிப்புகளும்
Dhurandhar: திரைப் பார்வை - தேசபக்திக்கு அப்பால்..!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in