அமெரிக்க தாக்குதல் எதிரொலி - ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை
ஈரானின் அறிவிப்பை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள்

ஈரானின் அறிவிப்பை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள்

Updated on
2 min read

தெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே​யான போர், தற்​காலிக​மாக நிறுத்தப்​பட்​டிருந்​தா​லும் அவ்​வப்​போது இருதரப்​புக்கும் இடையே தாக்​குதல்கள் நடை​பெற்று வரு​கின்றன. இந்​நிலை​யில், ஹார்முஸ் ஜலசந்​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் அதிநவீன அப்​பாச்சி ரக தாக்​குதல் ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்​தின. ஆனால், திட்​ட​மிட்டு ஹெலி​காப்​டர் மீது தாக்​குதல் நடத்​த​வில்லை என்று ஈரான் தெரி​வித்​தது.

எனினும், அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதற்​குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம் உத்​தர​விட்​டிருந்​தார். அதன்​படி தெற்கு ஈரான் பகு​தி​யில் உள்ள குவாஷெம் தீவு, ஜாஸ்க், சிரிக், பந்​தார் அப்​பாஸ் உட்பட பல நகரங்​கள் மீது அமெரிக்க கடற்​படை நேற்று கடும் தாக்​குதல்களை நடத்தின. இதில் ஈரானின் வான் பாது​காப்பு கட்​டமைப்​பு​கள், ரேடார் கட்​டமைப்​பு​கள் சேதம் அடைந்​த​தாக ஈரான் தெரிவித்தது.

இந்த தாக்குதலை அடுத்து, ஈரான் மீது நடத்​தப்​படும் ஒவ்​வொரு தாக்​குதலுக்​கும் சரி​யான பதிலடி கொக்கப்படும் என்றும், பாது​காப்​பாக இருக்க வேண்​டும் என்​றால் எங்​கள் பிராந்​தி​யத்தை விட்டுச் செல்லுங்கள் என்றும் அந்நாட்டின் வெளி​யுளவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அரக்ச்சி எச்​சரித்​தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்​க தாக்​குதலுக்குப் பதிலடி​யாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​தியதாக ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிப் படை (ஐஆர்​ஜிசி) நேற்று தெரி​வித்​தது. இந்த தகவலை பஹ்ரைன் அரசு உறுதி செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் உயர்மட்டக் கூட்டு ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

இதனிடையே, எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அதோடு, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தடுப்பதில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு சட்டம் மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று (புதன் கிழமை) கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரானுக்கு எதிரான விரோதச் செயல்களை திட்டமிடுவதை, ஒருங்கிணைப்பதை, செயல்படுத்துவதை, ஆதரிப்பதை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்கள் நிலத்தைப் பயன்படுத்துவதை தடுப்பதில் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சட்டம் மற்றும் தீர்மீக பொறுப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் கூறி இருந்த நிலையில், மீண்டும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் போர் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தள்ளிப் போவதாகவும் சர்வதேச நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>ஈரானின் அறிவிப்பை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள்</p></div>
தங்கம் விலை மேலும் ரூ.2,400 சரிவு - இரு தினங்களில் ரூ.5,000+ வீழ்ச்சி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in