வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழப்பு

வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹவானா: வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்​கை​யின்​போது தங்​களது நாட்​டைச் சேர்ந்த 32 அதிகாரி​கள் கொல்​லப்​பட்​ட​தாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில்” வெனிசுலா அரசாங்​கத்​தின் கோரிக்​கை​யின் பேரில் கியூ​பா​வின் ராணுவ மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் பல ஆண்​டு​களாக அங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இந்த நிலை​யில் வெனிசுலாவை சுற்​றிவளைத்து அமெரிக்கா நடத்​திய திடீர் தாக்​குதலில் 32 கியூபா அதி​காரி​கள் உயி​ரிழந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன் விமானத்​தில் புளோரி​டா​விலிருந்து வாஷிங்​ட​னுக்கு ஞாயிற்​றுக்​கிழமை பயணம் செய்த போது செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நேற்று (சனிக்​கிழமை) கியூபா மற்​றும் வெனிசுலாவைச் சேர்ந்த நிறைய பேர் கொல்​லப்​பட்​டனர் என்​பது உங்​களுக்கு தெரி​யும். ஆனால், எங்​கள் தரப்​பில் எந்த உயி​ரிழப்​பும் இல்​லை” என்​றார்.

வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழப்பு
தெலங்கானா ஜாக்ருதி அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாறும்: மேலவையில் கண்ணீர் மல்க கவிதா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in