தெலங்கானா ஜாக்ருதி அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாறும்: மேலவையில் கண்ணீர் மல்க கவிதா தகவல்

தெலங்கானா ஜாக்ருதி அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாறும்: மேலவையில் கண்ணீர் மல்க கவிதா தகவல்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலத்​தின் முன்​னாள் முதல்​வர் கே. சந்​திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் நிஜா​மா​பாத் மேலவை உறுப்​பின​ராக உள்​ளார். சமீபத்​தில் இவர் தன்​னுடைய தநதை​யின் பிஆர்​எஸ் கட்​சியை விட்டு வில​கு​வ​தாக அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், நேற்று ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற மேலவை கூட்​டத்​தில் கவிதா கண்​ணீர் மல்க பேசி​ய​தாவது: 2014-ம் ஆண்​டில் தனி மாநில​மாக தெலங்​கானா உதய​மானதும் என்னை ‘டார்​கெட்’ செய்து ஒரு கூட்​டம் செயல்​பட்​டது.

அதன் பின்​னர் ஒவ்​வொரு கால கட்​டத்​தி​லும் என் கட்​சிக்​குள்​ளேயே நான் அவமானப்​படுத்​தப்​பட்​டேன். எத்​தனை நாட்​கள்​தான் நான் அவமானங்​களை சமாளிப்​பது? தனிப்​பட்ட முறை​யில் நான் படும் அவமானம், கவலைகளை எப்​படி வெளியே கூற முடி​யும்? வேறு​வழி​யின்றி இப்​போது வெளிப்​படுத்த வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது.

பிஆர்​எஸ் கட்​சி​யில் எனக்கு எந்தப் பதவி, அல்​லது பணி கொடுத்​தா​லும் செய்​தேன். தவறுகள் குறித்து கேட்​டால் என்னை குறி​வைத்து பேச தொடங்​கினர். அமலாக்​கத் துறை, சிபிஐ வழக்​கு​களின்​போது கட்சி தரப்​பில் எவ்​வித ஆதரவோ அல்​லது உதவியோ செய்ய முன் வரவில்​லை.

இதன் காரண​மாக விரை​வில் தெலங்​கானா மாநிலத்​தில் புதிய கட்சி உரு​வாகும். குடும்ப சொத்​துக்​காக நான் போராட​வில்​லை. இது ஆத்ம கவுரவ போராட்​டம். என் அரசி​யல் அனுபவத்தை கொண்டு பிறந்த வீட்டை விட்டு வெளி​யேறி மக்​கள் முன்பு வரு​கிறேன். மக்​களுக்​காக வரு​கிறேன்.

என்​னுடைய ‘தெலங்​கானா ஜாக்​ரு​தி’ அறக்​கட்​டளை இனி அரசி​யல் கட்​சி​யாக மாறும். அடுத்த தேர்​தலில் போட்​டி​யிடும். ஒரே ஒருத்​தி​யாக இந்த சபை​யில் இருந்து வெளி​யேறி மாபெரும் சக்​தி​யாக திரும்ப வரு​வேன். இவ்​வாறு கவிதா பேசி​னார்​. பின்​னர்​ மேல​வை​யில்​ இருந்​து அவர்​ வெளியேறி​னார்​.

தெலங்கானா ஜாக்ருதி அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாறும்: மேலவையில் கண்ணீர் மல்க கவிதா தகவல்
‘இந்து தமிழ் இயர்புக் 2026’ வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in