அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 111 நாட்கள் நீடித்த பதற்றம் முழுமையாக தணிந்தது

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். படம்: பிடிஐ

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். படம்: பிடிஐ

Updated on
2 min read

வாஷிங்டன்: அமெரிக்​கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்​னணு முறை​யில் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர். இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்​டத்தை அமல்​படுத்த இருதரப்​பும் உறுதி அளித்து உள்​ளன.

அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர் நிறுத்​தத்தை அமல் செய்​தன. ஆனால் தற்​காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்​பும் அவ்​வப்​போது தீவிர தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வந்​தன. பாகிஸ்​தான், கத்​தார் உள்​ளிட்ட நாடு​கள் இருதரப்பு இடையே சமரச முயற்​சிகளில் ஈடு​பட்​டன. இதன்​காரண​மாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஜூன் 19-ம் தேதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இந்த சூழலில் ஒரு​நாள் முன்​ன​தாகவே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அரு​கே​யுள்ள வெர்​சாய் அரண்​மனை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு நேற்று விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது அவர் மின்​னணு முறை​யில் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார். இதே​போல ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் இருந்​த​படி அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்​னணு முறை​யில் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘வரலாற்று சிறப்​புமிக்க அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்டு உள்​ளேன். உலக அமை​தி, பிராந்​திய அமை​தியை நிலை​நாட்​டு​வ​தில் ஈரான் உறு​தி​யாக இருக்​கிறது’ என்று தெரிவித்துள்ளார். சமரச தூதர் என்ற வகை​யில் அமெரிக்​கா, ஈரான் அமைதி ஒப்​பந்​தத்​தில் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்​னணு முறை​யில் கையெழுத்​திட்​டார். அவர் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாக ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்பை வழங்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர், ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா கமேனி, ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, உள்​துறை அமைச்​சர் எஸ்​கந்​தர் மொமேனி ஆகியோ​ருக்கு நன்​றி.

சமரச முயற்​சிகளில் ஈடு​பட்ட கத்​தார், சவுதி அரேபி​யா, துருக்​கி, எகிப்து நாடு​களின் தலை​வர்​களுக்​கும் பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்​கும் நன்​றியை உரித்​தாக்​கு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு: ‘அமெரிக்​கா - ஈரான் இடையே 111 நாட்​கள் நீடித்த பதற்​றம் தற்​போது முழு​மை​யாக தணிந்​திருக்​கிறது. குறிப்​பாக சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களின் மக்​கள் நிம்​மதி பெரு​மூச்சு விடு​கின்​றனர். போர் காரண​மாக இது​வரை ரூ.122 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.

உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யு, உரங்​களுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது. பல்​வேறு நாடு​களின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்​கிறது. பங்​குச் சந்​தைகள் கடும் வீழ்ச்சி அடைந்து உள்​ளன. உரத் தட்​டுப்​ பாட்​டால் பல்​வேறு நாடு​களில் உணவு பஞ்​சம் ஏற்​படும் அபாய​மும் எழுந்​திருக்​கிறது. அமைதி ஒப்​பந்​தம்​ காரண​மாக அனைத்​து பிரச்​சினை​களுக்​கும்​ சுமுக தீர்​வு காணப்​பட்​டு உள்​ளது’ என்று சர்​வதேச பொருளா​தார நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். படம்: பிடிஐ</p><p></p></div>
சட்டப்பேரவைக்கு வெளியே உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in