சட்டப்பேரவைக்கு வெளியே உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம்
தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு, சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு

தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு, சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் திமுக எம்​எல்​ஏக்​கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்​டப்​பேர​வைக்கு வந்​தனர். அரசுக்கு எதி​ராக கோஷமிட்டு பேர​வைக்கு வெளியே ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

ஆளுநர் உரை​யுடன் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கியது. இதையொட்டி பேர​வைக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் மற்​றும் திமுக எம்​எல்​ஏக்​கள், ‘வாயைத் திறங்க சிஎம்’ என்ற வாசகத்​துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்​திருந்​தனர். பேர​வைக்​குள் செல்​வதற்கு முன்பு ‘தற்​குறி ஆட்​சிக்கு தமிழ்​நாடே சாட்​சி’, ‘தூய சக்தி அல்ல துயர சக்​தி’, ‘திரை​யில் நாயகன் தரை​யில் வில்​லன்’, ‘கதறல் கேட்​குதா சிஎம்’ என்​பது போன்ற வாசகங்​கள் எழுதப்​பட்ட பதாகைகளை ஏந்​தி​யபடி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​கள், பெண்​கள் பாது​காப்​பு, விவ​சா​யிகள் போராட்​டம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதி​ராக கோஷமிட்​டனர்​. பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, தலை​மைச் செயலக வளாகத்​தில் உதயநிதி ஸ்டாலின் கூறிய​தாவது: திமுக அரசு ஆட்​சி​யில் இருக்​கும்​போது, அரசு தயாரித்து கொடுக்​கக்​கூடிய எந்த உரையை​யும் ஆளுநர் முழு​மை​யாகப் படித்​தது கிடை​யாது. அதில் பல திருத்​தங்​களை ஆளுநர் செய்​வார். ஆனால், இந்த முறை ஆளுநர், இந்த அரசு என்ன தயாரித்​துக் கொடுத்​திருக்​கிறதோ, அதை ஒரு எழுத்து மாற்​றாமல் அப்​படியே வாசித்​திருக்​கிறார்.

அதே​போல் திமுக ஆட்​சி​யில் தமிழ்த்​தாய் வாழ்த்து மட்​டும்​தான் முதலில் வாசிக்​கப்​படும். முடி​யும்​போது தேசிய கீதம் ஒலிபரப்​பப்​படும். ஆனால் 2 முறை தேசிய கீதத்தை ஒலிபரப்பி இருக்​கிறார்​கள். இதிலிருந்தே இந்த அரசுக்​கும், மத்​திய ஆளுங்​கட்​சி​யான பாஜக​வுக்​கும் ஒரு இணக்​க​மான சூழ்​நிலை ஏற்​பட்​டு​விட்​டதோ என்​கிற எண்​ணம் அனை​வருக்​குமே ஏற்​பட்​டிருக்​கிறது.

முதல்​வர் தன்​னைப் பற்​றி​யும், தன் கட்​சியை பற்​றி​யும் சுய தம்​பட்​டம் அடித்து கொள்​ளும் உரை​யாகவே இது உள்ளது. இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்​கர் அரசாகத்​தான் செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் 175 பாலியல்வன்​கொடுமை​கள், 65 கொலைகள், 4 சாதிய படு​கொலைகள் தமிழகத்​தில் நடந்​திருக்​கின்​றன. பிரச்​சினை​களைப் பற்றி என்​றைக்கு நம் முதல்​வர் வாயை திறப்​பார்? என்று கேட்​ப​தற்​காகத்​தான், இன்​றைக்கு திமுக எம்​எல்​ஏக்​கள் எல்​லாம் கருப்பு பேட்ஜை அணிந்து வந்​தோம்.

திமுக அரசு கொண்​டு​வந்த ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் பெயரை குறுகிய எண்​ணத்​தோடு மாற்றி இருக்​கிறார்​கள். ‘பீரோ புல்​லிங்’ மாதிரி இன்​றைக்கு நம் முதல்​வர், தன் ஆட்​சி​யைக் காப்​பாற்​றிக் கொள்ள அதி​முக​வின் எம்​எல்​ஏக்​களை எல்​லாம் ‘எம்​எல்ஏ புல்​லிங்’ செய்து கொண்​டிருக்​கிறார். மாற்​றம் மாற்​றம் என்று கூறி​னார்​கள். ஆனால் ‘மாற்​றம் இல்​லை; நாம் எல்​லாம் சேர்ந்து இவர்​களிடம் மாட்​டிக்​கொண்​டோம்’ என்​று மக்​களை புலம்​ப வைத்​திருக்​கிறது இந்​த அரசு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு, சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு</p></div>
“வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேறும்” - இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என ஆளுநர் உரையில் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in