கரோனாவை பரப்பிய சீன ஆய்வகத்துக்கு அமெரிக்க முன்னாள் மருத்துவ ஆலோசகர் நிதி: துளசி கப்பார்ட் அம்பலம்

கரோனாவை பரப்பிய சீன ஆய்வகத்துக்கு அமெரிக்க முன்னாள் மருத்துவ ஆலோசகர் நிதி: துளசி கப்பார்ட் அம்பலம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக இருந்​தவர் துளசி கப்​பார்ட். இவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தார்.

இவர் தனது பதவி​யின் கடைசி நாளில் வெளி​யிட்ட ஆவணத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நான் தற்​போது வெளி​யிடு​வது இது​வரை யாரும் பார்க்​காத ஆவணம். அமெரிக்க முன்​னாள் அதிபர் ஜோ பைடனின் முன்​னாள் தலைமை மருத்​துவ ஆலோ​சக​ரான அந்​தோணி பவுசி, சீனா​வில் உள்ள வுஹான் வைராலஜி நிறு​வனத்​தில் நடை​பெற்ற வவ்​வால்​களில் கரோனா வைரஸ்​கள் குறித்த ஆபத்​தான ஆராய்ச்​சிக்கு நிதி​யளித்​தார். இந்த நிறு​வனத்​தில் இருந்​து​தான் கரோனா தொற்று பரவிய​தாக கூறப்​படு​கிறது.

அமெரிக்​காவை கரோனா தாக்​கிய​போது, அப்​போதைய அதிபர் பைடன் அரசின் கரோனா தடுப்பு அணுகு​முறைக்கு தலைமை தாங்​கிய பவுசி, சீன ஆய்வு நிறு​வனத்​துக்கு நிதி​யளிக்க அமெரிக்​கர்​களின் கோடிக்​கணக்​கான வரிப் பணத்தை வழங்​கி​னார். சீன ஆய்​வகத்​திலிருந்து கரோனா வைரஸ் பரவிய உண்​மை​களை பவுசி மறைத்து நாடாளு​மன்​றத்​துக்கு பொய் தகவல்​களை கூறி​யுள்​ளார். நம்​பக​மான ஆதா​ரங்​கள் புதைக்​கப்​பட்​டன. இவ்​வாறு துளசி கப்​பார்ட்​ தெரிவித்துள்ளார்.

கரோனாவை பரப்பிய சீன ஆய்வகத்துக்கு அமெரிக்க முன்னாள் மருத்துவ ஆலோசகர் நிதி: துளசி கப்பார்ட் அம்பலம்
பிரதமர் மோடி நெஞ்​சுரம் கொண்டவர்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in