ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்

அமெரிக்க விமானப் படையின் பி-2 போர் விமானம்.

அமெரிக்க விமானப் படையின் பி-2 போர் விமானம்.

Updated on
3 min read

டெஹ்ரான்: ஈ​ரானில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் செயல்​படும் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​ வைத்து அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.

ஈரானின் பல்​வேறு பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் செயல்​படு​கின்​றன. இவை ஏவு​கணை நகரங்​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன.

அமெரிக்​கா, இஸ்​ரேல் உளவுத் துறை​ தகவல்​களின்​படி ஈரான் தலைநகர் டெஹ்​ரான், கெர்​மன் ஷா, செம்​னான் உள்​ளிட்ட பகு​தி​களில் பூமிக்​கடி​யில் சுமார் 5 ஏவு​கணை ஆலைகள் செயல்​பட்டு வரு​வ​தாக தெரி​கிறது. அந்த ஆலைகளை போர் விமானங்​களில் இருந்து வீசப்​படும் சக்​தி​வாய்ந்த வெடிகுண்​டு​களால் அழிக்க முடி​யாது. சில நூறு அடி ஆழத்​துக்கு பூமியை துளைத்​துச் சென்​று, பின்​னர் வெடித்​துச் சிதறும் அதிநவீன வெடிகுண்​டு​களால் மட்​டுமே அழிக்க முடி​யும்.

அந்த வகையில் அமெரிக்​கா​விடம் ஜிபியு -57 என்ற சக்​தி​வாய்ந்த வெடிகுண்​டு​கள் உள்​ளன. இந்த வெடிகுண்​டு​கள் பூமியை துளைத்​துச் சென்​று, வெடித்துச் சிதறும் தன்மை கொண்​டவை. 20.5 அடி நீளம், 2.6 அடி விட்​டம், 14,000 கிலோ எடை கொண்ட ஜிபியு -57 வெடிகுண்​டு​களை அமெரிக்காவின்

எப் - 16, எப் - 22, எப் - 35 உள்​ளிட்ட அதிநவீன போர் விமானங்​களால் சுமந்து செல்ல முடி​யாது.

அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரக போர் விமானத்​தால் மட்​டுமே ஜிபியு -57 வெடிகுண்​டு​களை சுமந்து செல்ல முடி​யும். ஒரு பி-2 போர் விமானத்​தில் 2 ஜிபியு -57 வெடிகுண்​டு​களை மட்​டுமே பொருத்த முடி​யும்.

ஈரான் ராணுவத்​தின் மிகப்​பெரிய பலமாக ஏவு​கணை​கள் விளங்​கு​கின்​றன. அந்த நாட்​டிடம் 300 கி.மீ. முதல் 3,000 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்ட ஏவு​கணை​கள் உள்​ளன. இந்த ஏவு​கணை​கள் மூல​மாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது.

இதை முறியடிக்க ஈரானின் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் மற்​றும் சேமிப்பு கிடங்​கு​களை முழு​மை​யாக அழிக்க அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதற்​காக அமெரிக்​கா​வில் இருந்து நான்கு பி-2 போர் விமானங்​கள் வரவழைக்​கப்​பட்டு உள்​ளன.

172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட பி-2 போர் விமானங்​களை இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்​களில் தரை​யிறக்க முடி​யாது. அமெரிக்​கா​வின் மிசோரி​யில் உள்ள வொயிட்​மேன், குவாமில் உள்ள ஆண்​டர்​சன் விமானப்​ படைத் தளங்​களில் மட்​டுமே பி-2 போர் விமானங்​களை கையாள முடி​யும்.

இவை தவிர இந்​திய பெருங்​கடலில் அமெரிக்​கா, பிரிட்​டன் இணைந்து நிர்​வகிக்​கும் டியாகோ கார்​சியா தீவில் உள்ள விமானப் படைத் தளம், பிரிட்​டனின் குளோஸ்​டர்​ஷையர் விமானப் படைத் தளத்​தில் மட்​டுமே பி-2 விமானத்தை தரை​யிறக்க முடி​யும். ஆனால் இந்த விமானப் படைத் தளங்​களை அமெரிக்கா பயன்​படுத்த பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர் முதலில் அனு​மதி வழங்க மறுத்​த​தாக​வும், 48 மணி நேர கால ​தாமதத்​துக்​குப் பிறகு அனுமதி வழங்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

தற்​போது குளோஸ்​டர்​ஷையர், டியாகோ கார்​சியா தளங்​களில் இருந்து பி-2 போர் விமானங்​கள் புறப்​பட்டு ஈரானின் ஏவு​கணை ஆலைகள் மீது ஜிபியு - 57, ஜிபியு - 30, பிஎல்​யு-109 ரக வெடிகுண்​டு​களை வீசி வரு​கின்​றன.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரானின் ஏவு​கணை ஆலைகள் எந்​தெந்த இடங்​களில் உள்ளன என்​பது குறித்து இது​வரை உறு​தி​யான தகவல்​கள் கிடைக்​க​வில்​லை. உளவுத் துறை அளித்​துள்ள தகவல்​களின் அடிப்​படை​யில் டெஹ்​ரான் உள்​ளிட்ட சில பகு​தி​களை குறி​வைத்து பி-2 போர் விமானங்​கள் குண்​டு​களை வீசி வரு​கின்​றன.

ஈரான் ஏவு​கணை ஆலைகள் குறித்த துல்​லி​யமான தகவல்​கள் கிடைக்​கும் ​போது அந்த ஆலைகள் பி-2 போர் வி​மானங்​களால் தரைமட்​ட​மாக்​கப்​படும். ஈரானின் ராணுவ பலம்​ முழு​மை​யாக அழிக்​கப்​படும்​. இவ்​வாறு அமெரிக்​க ராணுவ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

ஈரானில் அணுக் கதிர்வீச்சு அபாயம் இல்லை: ஈரானின் இஸ்பகான் மாகாணம், நடான்ஸ் பகுதியில் பூமிக்கு அடியில் அணுசக்தி தளம் செயல்படுகிறது. இந்த அணுசக்தி தளம் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 1-ம் தேதி வான்வழி தாக்குதலை நடத்தின.

இதுகுறித்து சர்வதேச அணு சக்தி அமைப்புக்கான ஈரான் தூதர் ரெசா நஜாபி கூறும்போது, “அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், எங்களது நடான்ஸ் அணு சக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் அணு கதிர்வீச்சு அபாயம் எழுந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் ஈரானின் நடான்ஸ் அணு சக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை சர்வதேச அணு சக்தி அமைப்பு (ஐஏஇஏ) உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐஏஇஏ நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நடான்ஸ் அணு சக்தி தளம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தோம். இதில் அணு சக்தி தளத்தின் நுழைவு வாயில் கட்டிடங்கள் சேதமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், நடான்ஸ் தளத்தில் அணு கதிர்வீச்சு அபாயம் எழவில்லை. வேறு பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் ஈரானின் நடான்ஸ், போர்டோ அணு சக்தி தளங்கள், டெஹ்ரானில் உள்ள அணு சக்தி ஆராய்ச்சி மையம், இஸ்பகான் நகரில் உள்ள அணு சக்தி தொழில்நுட்ப மையம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவை மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இதில் ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. அவற்றை ஈரான் அரசு புனரமைத்து, அணு சக்தி திட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. இந்த சூழலில் நடான்ஸ் அணு சக்தி தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>அமெரிக்க விமானப் படையின் பி-2 போர் விமானம்.</p></div>
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in