நிவாரணம் அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் நன்றி!

நிவாரணம் அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் நன்றி!
Updated on
1 min read

கொழும்பு: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு அத்​தி​யா​வசிய மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை அளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்​து' நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது.

இத்​திட்​டத்​தின் கீழ் இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் விக்​ராந்த், ஐஎன்​எஸ் உதயகிரி கப்​பல்​கள் மூலம் 6.5 டன் உணவு மற்​றும் நிவாரணப் பொருட்​கள் இலங்​கைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. இதையடுத்து இந்​திய விமானப் படை மூலம் 12 டன் பொருட்​கள் கொழும்​பு நகருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. மேலும் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை மற்​றும் விமானப் படை வீரர்​களை இலங்​கைக்கு இந்​தியா அனுப்​பியது. இவர்​கள் இலங்​கை​யில் பல உயிர்​களை காப்​பாற்​றினர்.

சரி​யான நேரத்​தில் உதவிய இந்​தி​யா​வுக்கு இலங்கை மக்​கள் சமூக வலை​தளங்​களில் நன்றி தெரி​வித்​துள்​ளனர். இதில் கொழும்​பு​ நகரில் வசிக்​கும் ஒரு​வர் ரெடிட் வலை​தளத்​தில், ‘‘இலங்​கைக்கு பொருட்​கள் மட்​டுமின்றி மீட்​புப் பணி​களுக்கு ஹெலி​காப்​டர்​களும் வழங்கிய இந்​தி​யா​வுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வினாடி எடுத்​துக்​கொள்ள விரும்​பினேன். புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யில் கடவுளின் பணியை இந்​திய வீரர்​கள் செய்​தனர். நன்​றி” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

மற்றொரு​வர், “பு​வி​யியல்​ ரீ​தி​யாக இந்​தி​யா​வுக்கு இலங்கை ஒரு முக்​கிய நாடு. தனக்கு ஆதர​வாக இருந்​தா​லும் சரி, எதி​ராக இருந்​தா​லும் சரி மனி​தாபி​மான உதவி தேவைப்​படும் நாடு​களுக்கு உதவிட இந்​தியா எப்​போதும் தயா​ராக உள்​ளது’’ என்று பாராட்​டி​ உள்​ளார்.

நிவாரணம் அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் நன்றி!
2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் நித்​யானந்த் ராய் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in