வங்கதேசத்தில் 6-வது இந்து இளைஞர் கொலை

மோனி சக்கரவர்த்தி

மோனி சக்கரவர்த்தி

Updated on
2 min read

டாக்கா: வங்​கதேசத்​தின் பலாஷ் உபாசிலா பகு​தி​யில் மளிகை கடை நடத்தி வந்த இந்து இளைஞர் கொடூர​மாக கொலை செய்யப்பட்டு உள்​ளார்.

இந்​தி​யா​வின் அண்டை நாடான வங்​கதேசத்​தின் மக்​கள் தொகை சுமார் 18 கோடி ஆகும். இதில் 91% பேர் முஸ்​லிம்​கள். 8% பேர் இந்துக்​கள். இதர மதங்​களை சேர்ந்​தவர்​கள் ஒரு சதவீதம் பேர் உள்​ளனர். கடந்த 2024-ம் ஆண்​டில் வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. அதன்​ பிறகு இந்​துக்​கள் மீதான தாக்​குதல் சம்​பவங்​கள் அதி​கரித்​தன. வரும் பிப்​ர​வரி 12-ம் தேதி வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்த சூழலில் கடந்த டிசம்​பர் 12-ம் தேதி இன்​கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழு​வின் மூத்த தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி மீது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​டார். இதில் பலத்த காயமடைந்த அவர் கடந்த டிசம்​பர் 18-ம் தேதி உயி​ரிழந்​தார். ஹாடி கொலை​யின் பின்​னணி​யில் இந்​தியா இருப்​ப​தாக வங்கதேச சமூக ஊடகங்​களில் தகவல்​கள் பரவின. இதன்​ காரணமாக இந்​துக்​கள் மீதான தாக்​குதல் தீவிரமடைந்திருக்கிறது.

கடந்த டிசம்​பர் 18-ம் தேதி வங்​கதேசத்​தின் மைமன் சிங் பகு​தியை சேர்ந்த தீபு சந்​திர தாஸ் ஒரு கும்​பலால் அடித்​துக் கொல்​லப்​பட்​டு, எரிக்​கப்​பட்​டார். டிசம்​பர் 24-ம் தேதி ராஜ்​பாரி பகு​தியை சேர்ந்த அம்​ரித் மண்​டல் அடித்துக் கொல்​லப்​பட்​டார். டிசம்​பர் 29-ம் தேதி வங்​கதேச பாது​காப்புப் படை வீரர் பிஜேந்​திர பிஸ்​வாஸ், சக வீரரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

கடந்த 3-ம் தேதி ஷரி​யாத்​பூரை சேர்ந்த தொழில​திபர் ககோன் சந்​திர தாஸ் ஒரு கும்​பலால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். இதன் தொடர்ச்​சி​யாக நேற்று முன்​தினம் மாலை பி.டி.​காபர் என்ற நாளிதழின் மூத்த ஆசிரியர் ராணா பிர​தாப் மர்ம நபர்​களால் சுட்டுக் கொல்​லப்​பட்​டார்.

வங்​கதேசத்​தின் பலாஷ் உபாசிலா பகு​தி​யில் மோனி சக்கரவர்த்தி (40) என்​பவர் அங்​குள்ள சந்​தை​யில் மளிகை கடை நடத்தி வந்​தார். அவர் நேற்று முன்​தினம் இரவு வியா​பாரம் முடிந்து கடையை மூடிக் கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த மர்ம நபர்​கள் கத்​தி, அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​களால் அவரை தாக்​கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார்.

உயி​ரிழந்த மோனி சக்​கர​வர்த்தி தனது சமூக வலைதள பக்​கத்​தில், இந்​துக்​கள் மீதான தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவித்திருந்​தார். இதன்​ காரண​மாக அடிப்​படை​வாத கும்​பல் அவரை கொலை செய்​திருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது.

இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து வங்க தேசத்தின் நர்சிங்டி பகுதியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங் கேற்றனர். அப்போது மோனி சக்கரவர்த்தியின் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

<div class="paragraphs"><p>மோனி சக்கரவர்த்தி</p></div>
அதிமுக கூட்டணியில் பாமக: பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in