பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் சம்ஸ்கிருத மொழிக் கல்வி

பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் சம்ஸ்கிருத மொழிக் கல்வி
Updated on
1 min read

லாகூர்: பிரிவினைக்குப் பிறகு முதல் முறை​யாக பாகிஸ்​தானில் சம்​ஸ்​கிருத கல்வி கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்​தான் தனி நாடாக பிரிக்​கப்​பட்​டது. அதன்​பிறகு முதல்​முறை​யாக சம்​ஸ்​கிருத மொழிப் பாடத்​தை, லாகூர் பல்​கலைக்​கழக சமூக மற்​றும் இலக்​கிய அறி​வியல் பல்​கலைக்​கழகம் அறி​முகம் செய்​துள்​ளது.

சம்​ஸ்​கிருத மொழி தொடர்​பாக 4 பாடத் திட்​டங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளன. முன்​ன​தாக சம்​ஸ்​கிருதம் தொடர்​பான வகுப்​பு​கள் வார இறுதி நாட்​களில் நடத்​தப்​பட்​டன. அப்​போது மாணவர்​கள் காட்​டிய ஆர்​வத்​தால், இந்த பாடத் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து குர்​மானி மையத்​தின் இயக்​குநர் டாக்​டர் அலி உஸ்​மான் குவாஸ்மி கூறிய​தாவது: பஞ்​சாப் பல்​கலைக்​கழக நூல​கத்​தில் ஏராள​மான சம்​ஸ்​கிருத நூல்​கள் உள்​ளன. அந்த பொக்​கிஷங்​களை இது​வரை யாரும் கண்​டு​கொள்​ள​வில்​லை. பல அரிய சம்​ஸ்​கிருத ஓலைச்​சுவடிகளும் அங்​குள்​ளன. அவற்றை 1930-களில் ஜேசிஆர் ஊல்​னர் என்​பவர் சேகரித்து தொகுத்​துள்​ளார். அவற்றை வெளி​நாட்டு ஆராய்ச்​சி​யாளர்​கள் மட்​டுமே பயன்​படுத்தி வந்​தனர். தற்​போது சம்​ஸ்​கிருத மொழியைக் கற்​ப​தன் மூலம், அந்த நூல்​களில் உள்ள அரிய விஷ​யங்​களை வெளிக்​கொணர முடி​யும்.

அத்​துடன், எதிர்​காலத்​தில் மகா​பாரதம், பகவத் கீதை பற்​றிய பாடங்​களை அறி​முகப்​படுத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளோம். இன்​னும் 10 அல்​லது 15 ஆண்​டு​களில் மகா​பாரதம் மற்​றும் பகவத் கீதை தொடர்​பான பாகிஸ்​தான் அறிஞர்​களை பார்க்க முடி​யும். இவ்​வாறு உஸ்​மான் கூறி​னார்.

போர்​மேன் கிறிஸ்தவ கல்​லூரி பேராசி​ரியர் டாக்​டர் ஷாகித் ரஷீத் கூறும்போது, "செவ்​வியல் மொழிகளில் இந்த மனித குலத்​துக்கு தேவை​யான ஞானங்​கள் கொட்​டிக் கிடக்​கின்​றன. நான் அரபி, பெர்​சி​யன், சம்​ஸ்​கிருத மொழிகளை கற்​கத் தொடங்​கினேன். சம்​ஸ்​கிருத இலக்கண ஆசிரியர் பாணினி​யின் கிராமம் பாகிஸ்​தானில்​தான் உள்​ளது. சிந்து சமவெளி நாகரி​கத்​தின்​போது​தான் நிறைய விஷ​யங்​கள் எழுதப்​பட்​டுள்​ளன. சம்​ஸ்​கிருதம் என்​பது ஒரு மலை போன்​றது. அது ஒரு கலாச்​சார நினை​வுச் சின்​னம். அந்த மொழி எங்​களுக்​கும் சொந்​தம். ஒரு குறிப்​பிட்ட பிராந்​தி​யத்​துக்கு மட்​டும் சொந்​த​மானதல்ல" என்றார்.

பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் சம்ஸ்கிருத மொழிக் கல்வி
எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in