ஈரான் போரால் அபுதாபியில் வாடகை உயர்த்த தடை

ஈரான் போரால் அபுதாபியில் வாடகை உயர்த்த தடை
Updated on
1 min read

புதுடெல்லி: அபுதாபி​யில் குடி​யிருப்​பு​கள், வணிக மற்​றும் தொழில்​துறை சார்ந்த சொத்​துகளுக்​கான வாடகை உயர்வை அடுத்த அறி​விப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்​துள்​ளது.

இதன்​படி வீட்டு உரிமை​யாளர்​கள் தற்​போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்​தவோ அல்​லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்​பட்ட சொத்​துகளில் குடியேறும் புதிய வாடகை​தா​ரர்​களிடம் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கவோ அனுமதிக்கப்பட மாட்​டார்​கள்.

அபு​தாபி​யின் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை அமைப்​பான அபுதாபி ரியல் எஸ்​டேட் மையம் இந்த முடிவை அறி​வித்​துள்​ளது, மேலும் இது உடனடி​யாக அமலுக்கு வரு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. ஈரான் - அமெரிக்க போர் காரண​மாக அதி​கரித்து வரும் செல​வு​களைச் சமாளிக்க பல குடும்​பங்​களும் வணி​கர்​களும் போராடி வரும் வேளை​யில் இந்த மாற்​றம் உடனடி நிதிப் பாது​காப்பை வழங்​கு​கிறது.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசிக்​கும் புலம்​பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதத்​தின் மிகப்​பெரிய செல​வாக பெரும்பாலும் வாடகையே இருக்​கிறது. அந்​நாட்​டின் மிகப்​பெரிய வெளி​நாட்​டுச் சமூகங்​களில் ஒன்​றாக விளங்​கும் இந்தியர்களுக்கு, இந்த வாடகை முடக்​கம் கணிச​மான சேமிப்பாக மாறும். இது அபு​தாபி​யில் வசிக்​கும் ஆயிரக்கணக்கான இந்​தி​யக்​ குடும்​பங்​களுக்​கு நிம்​ம​தி​யை அளித்​து உள்​ளது.

ஈரான் போரால் அபுதாபியில் வாடகை உயர்த்த தடை
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in