ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் - மோடி 40 நிமிடங்கள் ஆலோசனை

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் - மோடி 40 நிமிடங்கள் ஆலோசனை
Updated on
2 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும் நேற்று தொலைபேசி​யில் 40 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்​தும், ஹார்​முஸ் ஜலசந்​தியைத் திறப்​பது குறித்​தும் இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தின. இதற்கு பதிலடி தரும் வகை​யில் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​கள் மற்​றும் இஸ்​ரேல் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இந்த நிலை​யில் அமெரிக்கா மற்​றும் ஈரான் இடையே போர் நிறுத்​தம் செய்ய பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்​தது. இதனால் 2 வார காலம் இடைக்​கால போர் நிறுத்​தம் அமலானது. இந்த போர் நிறுத்​தம் 21-ம் தேதி​யுடன் முடிகிறது. அதற்​குள் நிரந்தர போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்பட பல்​வேறு தரப்​பினர் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அதன்​படி, கடந்த சனிக்​கிழமை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இது தோல்​வியடைந்​தது. இதையடுத்து ஹார்​முஸ் ஜலசந்​தியை முடக்​கு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் மேற்​காசி​யா​வில் மீண்​டும் போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வுக்கு முக்​கி​யத்​து​வம்: அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் நாடு​களு​டன் இந்​தி​யா​வுக்கு மிக நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. 3 நாடு​களின் தலை​வர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி நேரடி தொடர்​பில் உள்​ளார். இஸ்​லா​மா​பாத் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்த பிறகு ரஷ்​யா, துருக்​கி, ஜெர்​மனி, பிரான்​ஸ், பிரிட்​டன் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் சமரச முயற்​சிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சூழலில் இந்​திய பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யிருக்​கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபரும் எனது நண்​பரு​மான டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி​யில் அழைத்​தார். அப்​போது பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து ஆலோ​சித்​தோம். சர்​வ​தேச விவ​காரங்​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​வது குறித்து உறுதி மேற்​கொண்​டோம். மேற்கு ஆசியா நில​வரம் குறித்​தும் (அமெரிக்​கா- ஈரான் போர்) ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பாது​காப்​பான, தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினோம். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் டெல்​லி​யில் நேற்று கூறும்​போது, ‘‘அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பல்​வேறு நாடு​கள் முயற்சி செய்து வரு​கின்​றன. அந்த நாடு​களின் சமரச முயற்​சியை அமெரிக்கா வரவேற்​கிறது. இதே​போல இந்​தி​யா​வின் சமரச முயற்​சி​யை​யும் நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம்.

அதிபர் ட்ரம்​பும் பிரதமர் மோடி​யும் செவ்​வாய்க்​கிழமை 40 நிமிடங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது ஈரான் போர் மற்​றும் இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்​தகம் குறித்து முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது’’ என்​றார். கடந்த வாரம் சனிக்​கிழமை நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யின்​போது, அமெரிக்கா முன்​வைத்த சில நிபந்​தனை​களை ஈரான் ஏற்​க​வில்லை என்​ப​தால் சுமூக முடிவு எட்​டப்​பட​வில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தெரி​வித்​தார். ஆனால், பேச்​சு​வார்த்தை தோல்வி அடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்​றச்​சாட்டு வைத்​திருந்​தது.

இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் கூறும் போது, “விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறோம். மேலும், இவை எல்லாம் இறைவனிடம் இருக்கிறது” என தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே 2-வது சுற்றுப் பேச்​சு​வார்த்தை நாளை (ஏப்​ரல் 16) முதல் தொடங்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. பேச்​சு​வார்த்​தைக்​கான இடம் மற்​றும் தேதி இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்லை எனினும், நாளை பேச்​சு​வார்த்தை நடை​பெறும் என்று செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் - மோடி 40 நிமிடங்கள் ஆலோசனை
“இந்த ஆபத்தை முன்னரே கணித்தவர் ஸ்டாலின்” - தொகுதி மறுவரையறை குறித்து ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in