“எங்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கிறது” - அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பிரதமர் மோடி | கோப்புப் படம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பிரதமர் மோடி | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: “இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை" என்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸின் கூற்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு இல்லை என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்தார். அதோடு, கடந்த மூன்று மாதங்களாக இஸ்ரேலைப் பாதுகாக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்க வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கு வகையில் ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், இந்தியாவில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இந்தியா என்ற ஒரு சிறிய நாடு போல, எங்களுக்கு வேறு சில நண்பர்களும் இருக்கிறார்கள்.

அங்கிருக்கும் 140 கோடி மக்களிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்ததிலேயே மிகச்சிறந்த நண்பர் அதிபர் டிரம்ப். நான் ஜே.டி. வான்ஸை மதிக்கிறேன். ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை, இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பிரதமர் மோடி | கோப்புப் படம்</p></div>
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in