“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன்,  நம்பகமான கூட்டாளி!” - புதின்
Updated on
1 min read

மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானிய மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்துவர வேண்டும் என விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானுக்கான ரஷ்ய உதவிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் படுகுழியில் தள்ளி, ஒரு பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக புதின் குற்றம்சாட்டி இருந்தார். ஈரானின் உச்சத் தலைவர் வஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஈரானில் ஆட்சியில் இருந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா, பதவியில் இருந்து 1979-ல் அகற்றப்பட்டார். அது முதல் ரஷ்யா, ஈரானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. எனினும், தற்போதைய போர் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரானுக்கு ரஷ்யா எவ்வித உதவியும் வழங்கவில்லை என ஈரானிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஈரான் போர் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தப் போர் ரஷ்யாவுக்கு சாதகமானதாகவும் அமைந்தது கவனிக்கத்தக்கது.

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன்,  நம்பகமான கூட்டாளி!” - புதின்
ஈரான் போர் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது கோழைத்தனம்: காங்கிரஸ் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in