குவைத் துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழப்பு?

குவைத் துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழப்பு?
Updated on
1 min read

டெஹ்ரான்: கு​வைத் நாட்​டின் சுவைக் துறை​முகத்​தில், அமெரிக்க கடற்​படை​யின் 6 சிறியரக கப்பல்கள் மீது ஏவு​கணை மூலம் தாக்​குதல் நடத்​தி​ய​தாக​வும், இதில் அமெரிக்க வீரர்​கள் பலர் கொல்​லப்​பட்​ட​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது.

அமெரிக்க தாக்​குதலுக்கு பதிலடி​யாக ‘ஆபரேசன் ட்ரூ பிராமிஸ்’ என்ற பெயரில் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. குவைத் நாட்​டின் சுவைக் துறை​முகம் மீது நேற்று கதிர் 389 ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. 1,000 கி.மீ தூரம் சென்று தாக்​கும் இந்த ஏவு​கணை, அமெரிக்க கடற்​படை​யின் 6 சிறிய ரக கப்​பல்​களை தகர்த்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கப்​பல்​கள் கடற்​கரை​யில் வீரர்​களை தரை​யிறக்​கும் வசதி கொண்​ட​வை.

இவற்​றில் 3 கப்​பல்​கள் மூழ்கி விட்​ட​தாக​வும், 3 கப்​பல்​கள் தீப்​பற்றி எரிவ​தாக​வும் ஈரான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இந்த தாக்​குதலில் அமெரிக்க வீரர்​கள் பலர் கொல்​லப்​பட்​ட​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது. இதை அமெரிக்கா இன்​னும் உறுதி செய்​ய​வில்​லை. மேலும், குவைத்​தில் அல்​-​கார்ஜ் என்ற

இடத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில், எரிபொருள் நிரப்​பும் வாக​னங்​கள் பல சேதம் அடைந்​த​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது.

போர் விமானம் மீது.. ஈரான் நாட்​டின் ஃபார்ஸ் மாகாணத்​தில் நேற்று தாக்​குதல் நடத்த வந்த அமெரிக்க விமானப்​படை​யின் எப்​-16 போர் விமானத்​தின் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது. அதே​போல், துபா​யில் அமெரிக்க ராணுவத்​தின் ட்ரோன் பிரி​வினர் தங்​கி​யிருந்த இடம், துபாய் ஓட்​டல் ஒன்​றின் மீதும் ‘கமிக்​காசி’ என்ற ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்​தி​ய​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது.

இங்கு 500-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவத்​தினர் தங்​கி​யிருந்​தனர். இதில் காயம் அடைந்த அமெரிக்க வீரர்​கள் ஆம்​புலன்ஸ் வாக​னங்​கள் மூலம் துபாய் மருத்​து​வ​மனை​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

குவைத் சர்​வ​தேச விமான நிலை​யம் மீது ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும், இதில் விமான நிலைய ரேடார் சேதம் அடைந்​த​தாக​வும் ஈரான் ராணுவம் கூறி​யுள்​ளது. இதை குவைத் விமான போக்​கு​வரத்து செய்தி தொடர்​பாளர் உறுதி செய்​துள்​ளார். ஈரான் போர் காரண​மாக வளை​குடா நாடு​களில் ஏற்​கெனவே விமான போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. விமான நிறு​வனங்​கள் ஏராள​மான பயணங்​களை ரத்து செய்​துள்​ளன. இதனால் சர்​வ​தேச விமான போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

குவைத் துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழப்பு?
“எங்கள் எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” - வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in