லிட்​டன் சந்​திர கோஸ்

லிட்​டன் சந்​திர கோஸ்

வங்கதேசத்தில் இந்து தொழிலதிபர் கொலை

Published on

புதுடெல்லி: வங்​கதேசத்​தில் வாழும் இந்​துக்​கள் மீதான தாக்குதல்கள் அதி​கரித்து வரு​கின்​றன.

கடந்த டிசம்​பர் 2ம் தேதி பிரந்​தோஷ், உப்​தால் சர்க்​கார், டிசம்​பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்​திர ராய், சுபோர்ணா ராய், டிசம்​பர் 12ம் தேதி சாந்தோ சந்​திர தாஸ், டிசம்​பர் 18ம் தேதி திபு சந்​திர தாஸ், டிசம்​பர் 24ம் தேதி அம்​ரித் மண்​டல், டிசம்​பர் 29ம் தேதி பஜேந்​திர பிஸ்​வாஸ், டிசம்​பர் 31ம் தேதி கோகன் சந்​திர தாஸ், கடந்த 5ம் தேதி ராணா பிர​தாப், கடந்த 6ம் தேதி மிதுன் சர்க்​கார், சாரத் மணி சக்கரவர்த்​தி, கடந்த 10ம் தேதி ஜாய் மகா​போத்​ரா, கடந்த 11ம் தேதி சமீர் தாஸ், பிரளாய் சக்​கி, கடந்த 16ம் தேதி ரிபன் சாகா ஆகிய இந்துக்கள் அடுத்​தடுத்து கொலை செய்​யப்​பட்​டனர்.

இந்த சூழலில் வங்​கதேசத்​தின் காஜிபூரில் இந்து தொழில​திபர் லிட்​டன் சந்​திர கோஸ் (55) என்​பவர் நடத்​தும் ஓட்​டலுக்​குள் நேற்று முன்​தினம் சிலர் புகுந்து தாக்​குதல் நடத்​தினர். இதில் படு​கா​யம் அடைந்த லிட்​டன் சந்​திர கோஸ் மருத்​து​வ​மனை​யில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்​பாக ஸ்வாபன் மியா, அவரது மனைவி மஜி​தா, மகன் மசூம் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்​கள் அளித்த வாக்​கு மூலத்​தில், லிட்​டன் சந்​திர கோஸ் ஓட்டலில் பணி​யாற்​றும் அனிதா தாஸ், தங்​கள் தோட்​டத்​தில் வாழைப் பழங்​களை திருடி விட்​ட​தாக​வும் அதன் காரண​மாக ஓட்டல் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக​வும் தெரி​வித்து உள்​ளனர்.

வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வ​ராக முகமது யூனுஸ் பதவி வகிக்​கிறார். பாகிஸ்​தான், சீனா​வுக்கு மிக நெருக்​க​மாக இருக்​கும் அவர், இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​களை தடுக்க முகமது யூனுஸ் அரசு தவறிவிட்டதாக ஐ.நா. சபை உட்பட சர்​வ​தேச அமைப்​பு​கள்​ பகிரங்​க​மாக குற்​றம்​ சாட்​டி உள்​ளன.

<div class="paragraphs"><p>லிட்​டன் சந்​திர கோஸ்</p></div>
நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in