நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

திருப்போரூர்: செங்​கல்​பட்டு மாவட்​டம், நெம்​மேலி​யில் ரூ.360 கோடி​யில் நீர்த்​தேக்க திட்​டத்​திற்கு மீனவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், கிழக்கு கடற்​கரை சாலை மற்​றும் பழைய மாமல்​லபுரம் சாலை ஆகிய​வற்​றுக்கு இடையே முட்​டுக்​காடு முகத்​து​வாரத்​தில் இருந்து மாமல்​லபுரம் வரை 3,010 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.360 கோடி​யில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்​கும் வகை​யில், மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைய உள்​ளது. இந்த நீர்த்​தேக்​கத்​திற்​கான அடிக்​கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்​லபுரம் அருகே நெம்​மேலி​யில் நடை​பெற உள்​ளது.

இதற்​கிடையே, உப்​புநீர் சூழ்ந்த பகுதி மற்​றும் பக்​கிங்​காம் கால்​வாய் ஆகிய​வற்றை மாற்றி அமைப்​ப​தால் மீன்​களின் இனப்​பெருக்​கம் தடுக்​கப்​படும். இயற்கை சூழல் மாற்​றம் ஏற்​பட்டு பாதிப்பு ஏற்​படும்.கோவளம் முதல் கொக்​கில மேடு வரை (35 கி.மீ.) இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் போது, மீன்​பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்​படும்.

மழை, புயல், வெள்​ளம் காலங்​களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்​லாத போது, இந்த உபவடி நில பரப்​பில் இறால், நண்டு மற்​றும் மீன் ஆகிய​வற்றை பிடித்து பிழைப்பை நடத்தி வரு​வ​தால் இத்​திட்​டத்​தினை மறு​பரிசீலனை செய்ய கோரி, பல்​வேறு மீனவர் அமைப்​பு​கள் இத்​திட்​டத்​திற்கு எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

இந்​நிலை​யில், மீனவர் அமைப்பு பிர​தி​நி​தி​களு​டன் சமா​தானக் கூட்​டம் நேற்று திருப்​போரூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் தி.சினேகா தலை​மை​யில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் கலந்​துக் கொண்​டார். முன்​ன​தாக, இந்த கூட்​டத்​தில் நீர்​வளத்​துறை அதி​காரி​கள், படக்​காட்​சிகள் மூலம் நீர்த்​தேக்​கம் அமைய உள்ள இடம், பரப்​பளவு குறித்து மீனவர்​களுக்கு விளக்​கினர். 18 மீனவ கிராமங்​களை சேர்ந்த மீனவர்​கள் கலந்​துக் கொண்டு தங்​களின் நிலைப்​பாடு குறித்து பேசி​னார். மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் எந்த வகை​யிலும் பாதிக்​கப்​ப​டாது என்​றும், இந்த திட்​டத்​திற்​கும், கடல் மீன்​களுக்​கும் எந்த வகை​யிலும் பாதிப்பு ஏற்​ப​டாது என்​றும் மீன்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அமைச்​சர் உறுதி: பின்​னர் பேசிய அமைச்​சர் தா.மோ.அன்பரசன், மீனவர்​களின் கருத்​துகள் முதல்​வர் கவனத்துக்கு கொண்டு செல்​லப்​பட்டு உரிய தீர்வு காணப்​படும். இந்த திட்​டத்​தால் சுற்​றுப்​புற கிராமங்​களின் நிலத்​தடி நீர் மட்​டம் உயர்​வதோடு, மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடி உரிமைக்கு பாதிப்பு ஏற்​ப​டா​மல், அவர்​களுக்கு உரிய அனு​மதி வழங்​கப்​படும். படகு​களை நிறுத்​திக் கொள்ள இடம் வழங்​கப்​படும் என்​றும் உறுதி அளித்​தார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
சென்னை: திருமணம் செய்துகொள்ளும் பிரச்சினையில் காதலன் வீட்டில் பிசியோதெரபி மாணவி தற்கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in