இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?

இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?
Updated on
1 min read

புதுடெல்லி: புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு காலா​வ​தி​யான நிவாரணப் பொருட்​களை பாகிஸ்​தான் அனுப்​பி​யுள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.

டிட்வா புய​லால் இலங்​கை​யில் பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. மழை வெள்​ளம், நிலச்​சரி​வில் சிக்கி இது​வரை 330-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளனர். இலங்கைக்கு இந்​தியா சார்​பில் நிவாரணப் பொருட்​கள் விமானங்​களில் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், இலங்​கை​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரகம் எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று ஒரு பதிவை வெளி​யிட்​டது. அதில், ‘‘பாகிஸ்​தானில் இருந்து வந்த நிவாரணப் பொருட்​கள், இலங்​கை​யில் புய​லால் பாதிக்​கப்​பட்ட நமது சகோ​தர, சகோ​தரி​களுக்கு வெற்​றிகர​மாக விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த உதவி இலங்​கைக்கு பாகிஸ்​தானின் ஆதரவு எப்​போதும் உள்​ளது என்​பதை வெளிப்​படுத்​துகிறது’’ என்று கூறப்​பட்​டிருந்​தது. அத்​துடன், நிவாரணப் பொருட்​களின் புகைப்​படங்​களை​யும் வெளி​யிட்​டது.

ஆனால், சமூக வலை​தள​வாசிகள் பலர் அந்த நிவாரணப் பொருட்​களில் உள்ள ‘எக்​ஸ்​பையரி டேட்​’டை கவனித்​துள்​ளனர். அதில், நிவாரணப் பொருட்​களின் பாக்​கெட்​டு​களில் ‘அக்​டோபர் 2024’ என்று அச்​சிடப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு அக்​டோபர் மாதமே காலா​வ​தி​யான பொருட்​களை நிவாரணம் என்ற பெயரில் இலங்​கைக்கு பாகிஸ்​தான் அனுப்​பி​யுள்​ளது என்று கடுமை​யாக விமர்​சித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து சமூகவலைளத்​தில் ஒரு​வர் கூறும்​போது, ‘‘உணவுப் பொருட்​கள் என்ற பெயரில் பாகிஸ்​தானில் உள்ள குப்​பைகளை எல்​லாம் இலங்​கைக்கு தள்​ளி​விட்​டுள்​ளனர்’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

மற்​றொரு​வர் கூறும்​போது, ‘‘குப்​பைகளை அப்​புறப்​படுத்​து​வதற்​குப் பதில், அவற்றை இலங்​கைக்கு பாகிஸ்​தான் அனுப்​பி​யுள்​ளது’’ என்று கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இன்​னொரு சமூக வலை​தள​வாசி கூறும்​போது, ‘‘விமர்​சனங்​களில் இருந்து தப்​பிக்க இலங்​கை​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரகம், ‘கமென்ட் பாக்​ஸ்​’ஸை திறக்​காமல் இருப்​பது நல்​லது’’ என்று கிண்​டலடித்​துள்​ளார்.

மற்​றொரு​வர் கூறும்​போது, ‘‘பாகிஸ்​தான் தூதரகம் வெளி​யிட்ட நிவாரணப் பொருட்​களின் பாக்​கெட்​டு​களைப் பார்க்​கும்​போது, அவை எல்​லாம் இலங்​கை​யில் தயாரிக்​கப்​பட்ட பிஸ்​கெட்​டு​கள் போல் உள்​ளன. உண்​மை​யிலேயே பாகிஸ்​தானில் இருந்து நிவாரணப் பொருட்​கள் வந்​த​தா?’’ என்​று சந்​தேகம்​ எழுப்​பியுள்​ளார்​.

இலங்கைக்கு பாக். அனுப்பியது காலாவதியான பொருட்களா?
நிவாரணம் அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் நன்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in