ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
Updated on
1 min read

காபூல்: ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்தான் எல்​லைப் பகு​தி​களில் தற்​காலிக போர்​ நிறுத்​தம் முடிவுக்கு வந்ததையடுத்​து, இரு நாடு​களுக்​கும் இடையே மீண்​டும் மோதல் வெடித்​துள்​ளது. ரம்​ஜான் பண்​டிகையை முன்னிட்டு ஆப்​கன் மற்​றும் பாகிஸ்​தான் ஆகிய இரு தரப்பினரும் அறி​வித்​திருந்த குறுகிய காலப் போர் நிறுத்தம் கடந்த புதன்​கிழமை​யுடன் முடிவுக்கு வந்​தது.

இதைத் தொடர்ந்​து, ஆப்​கானிஸ்​தானின் குனர் மாகாணத்தில் உள்ள நராய் மற்​றும் சர்​கானோ மாவட்டங்களைக் குறி​வைத்து பாகிஸ்​தான் ராணுவம் பீரங்கி குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தாக அந்த மாகாணத்​தின் செய்தி மற்​றும் கலாச்​சா​ரத் துறை இயக்குநர் ஜியா​வுர் ரஹ்​மான் ஸ்பீன்​கர் தெரி​வித்​தார்.

இருவர் உயிரிழப்பு இதுகுறித்து அவர் கூறுகை​யில், “பாகிஸ்​தான் நடத்​திய தாக்​குதலில் இரு​வர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்​தனர். பாகிஸ்தானின் இந்த தாக்​குதலுக்கு ஆப்​கன் எல்​லைப் பாது​காப்​புப் படை​யினரும் தகுந்த பதிலடி கொடுத்​தனர். இதில் பாகிஸ்​தானின் மூன்று ராணுவச் சாவடிகள் அழிக்கப்​பட்​டதுடன், ஒரு​வர் கொல்​லப்​பட்​டார்” என்​றார்.

இருப்​பினும், இதுகுறித்து பாகிஸ்​தான் ராணுவம் தரப்​பில் உடனடியாக விளக்​கம் அளிக்​கப்​பட​வில்​லை. அதே வேளை​யில், ஆப்​கன் படைகளே முதலில் தாக்​குதலை ஆரம்​பித்​த​தாக பாகிஸ்​தான் தரப்பு அதி​காரி ஒரு​வர் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.

ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
கேரள தேர்தல் களத்தில் முந்தப் போவது யார்? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in