ராணா பிரதாப்
வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து இளைஞர் கொலை
டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் அண்மைக்காலமாக இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிச.18-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த தீபு சந்திரா அடித்துக் கொல்லப்பட்டார். டிச. 24-ல் ராஜ்பாரி பகுதியை சேர்ந்த அம்ரித் மண்டல் கொலை செய்யப்பட்டார். கடந்த 29-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில் வங்கதேசத்தின் ஜெஸ்ஸோர் மாவட்டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த ராணா பிரதாபை (35) மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
முன்னணி நாளிதழின் மூத்த ஆசிரியராக அவர் பணியாற்றி வந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
