அமெரிக்காவில் தெலுங்கு பெண் கொலை: இந்தியாவுக்கு தப்பிய முன்னாள் காதலன் தமிழகத்தில் கைது

நிகிதா, அர்​ஜுன்

நிகிதா, அர்​ஜுன்

Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்​கா​வின் மேரிலாண்ட் பகு​தி​யில் முன்​னாள் காத லியை கொலை செய்​து​விட்டு இந்​தியா தப்​பி வந்தவர் தமிழகத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

அமெரிக்​கா​வின் எலி​காட் நகரில் வசித்தவர் இந்​தி​யப் பெண் நிகிதா கொடிஷலா. இவரை காண​வில்லை என்று இவரது முன்​னாள் காதலன் அர்​ஜூன் சர்மா என்​பவர் போலீ​ஸில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்​தார்.

நிகிதா கடைசி​யாக கடந்த டிசம்​பர் 31-ம் தேதி மேரிலாண்ட் நகரில் உள்ள தனது வீட்​டுக்கு வந்​தார் எனவும் அவர் கூறி​னார். புகார் கொடுத்த அன்றே அர்​ஜுன் சர்மா இந்​தியா தப்​பி​விட்​டார். மறு​நாள் அவரது வீட்​டில் போலீ​ஸார் சோதனை செய்​த​போது, அங்கு நிகிதா கத்திக் குத்து காயங்​களு​டன் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இவரை கடந்த டிசம்​பர் 31-ம் தேதி இரவு அர்​ஜுன் சர்மா கொலை செய்​திருக்​கலாம் என போலீ​ஸார் கருதுகின்​றனர். கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடை​பெறுகிறது.

இதையடுத்து நிகிதா குடும்​பத்​தினருக்கு தகவல் தெரி​வித்த இந்​திய தூதரகம் அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை செய்து வரு​கிறது. இவர் தெலுங்கு பெண் என தெரிய​வந்​துள்​ளது.

அர்​ஜூன் சர்​மாவை கைது செய்ய இன்​டர்​போல் உதவியை அமெரிக்க போலீ​ஸார் நாடினர். இதையடுத்து இந்​தியா தப்​பி வந்த அர்​ஜுன் சர்மா தமிழகத்​தில்​ கைது செய்​யப்​பட்​டார்.

<div class="paragraphs"><p>நிகிதா,&nbsp;அர்​ஜுன்</p></div>
சீனாவை பின்னுக்கு தள்ளி அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in