அமெரிக்காவில் 17 சீக்கியர்கள் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்ட 17 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஸ்டாக்டன் நகரில் குருத்வாரா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அந்த வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற விழாவின்போது இரு சீக்கிய குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணம், யுபா நகர போலீஸார் விசாரணை நடத்தி 17 சீக்கியர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து சட்டர் கவுன்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜெனிபர் கூறுகையில், “யுபா நகரில் மோதலில் ஈடுபட்ட சீக்கியர்களிடமிருந்து 41 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பவித்தர் சிங், ஹுசன்தீப் சிங் ஆகிய 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்குகள் உள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in