Published : 21 Dec 2016 09:45 AM
Last Updated : 21 Dec 2016 09:45 AM
ஆப்கானிஸ்தானுக்கு வெளியே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கப்படுவதை சர்வ தேச நாடுகள் தடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசினார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதை மறைமுகமாக குறிப் பிடும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசும்போது, “ஆப்கானிஸ்தானில் நிலையான அமைதி ஏற்பட தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு அதன் அண்டை நாட்டில் புகலிடம் அளிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே தலிபான், அல்காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கப்படுவதை சர்வதேச நாடுகள் தடுக்க வேண்டும்” என்றார். பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் சையது அக்பருதீன் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசும்போது, “தலிபான், ஹக்கானி நெட்வொர்க், டாயேஷ், அல்-காய்தா மற்றும் இவற்றால் அங்கீகரிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற அமைப்புகள் முற்றிலும் சர்வதேச சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு ஆப் கானிஸ்தானுக்கு வெளியே ஆதரவு அளிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பிற நாடுகளின் முயற்சிகளை இந்த அமைப்புகள் சீர்குலைக் கின்றன. பள்ளிகள், மசூதிகள் தகர்க்கப்படுகின்றன. மதவழி பாட்டுக்காக கூடும் மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு வெளியே கிடைக்கும் ஆதரவு மற்றும் புகலிடம் காரணமாக, இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் செயல்பட முடிகிறது. எனவே ஆப்கானிஸ்தான் தொடர் பான தங்கள் அணுகுமுறையை சர்வதேச நாடுகள் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் செய்வது குறித்து ஆராய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT