Last Updated : 08 Dec, 2016 09:22 AM

 

Published : 08 Dec 2016 09:22 AM
Last Updated : 08 Dec 2016 09:22 AM

தர்கா மீதான தாக்குதல் வழக்கில் தீவிரவாத குழு தலைவர் முப்தியின் மரண தண்டனை உறுதி

வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவு

தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் ஹுஜி தீவிரவாத குழுவின் தலைவர் மற்றும் அவரது 2 ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வங்கதேச உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

சில்ஹெட் நகரில் உள்ள ஒரு தர்கா மீது கடந்த 2004-ம் ஆண்டு தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்போது வங்கதேசத்துக்கான பிரிட்டன் தூதராக இருந்த அன்வர் சவுத்ரி நூலிழையில் உயிர் தப்பினார். எனினும், இதில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர். மேலும் 70 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சில்ஹெட் மண்டல விரைவு விசாரணை நீதிமன்றம், ஹர்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹூஜி) தலைவர் முப்தி அப்துல் ஹன்னான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய் யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான 4 பேர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கள் மரண தண்டனையை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

மேலும் கடந்த 2001-ம் ஆண்டு 10 பேரை பலி வாங்கிய குண்டுவெடிப்பு வழக்கில் ஹன்னான் மற்றும் 7 பேருக்கு வேறு ஒரு நீதிமன்றம் ஏற்கெனவே மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x