

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை முயற்சியில் ஒரு பகுதியான ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது நாசா. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பை காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. வணிக ரீதியாகவும் மற்றும் சர்வதேச பார்ட்னர்ஷிப் மூலம் இந்தத் திட்டம் இயங்கி வருகிறது. இதில் அறிந்து கொள்ளும் பாடங்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்திற்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1 பயணம் - முக்கிய அம்சங்கள்