துருக்கியில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி; காயம் 16

துருக்கியில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி; காயம் 16
Updated on
1 min read

துருக்கியில் கவர்னர் அலுவலகத்தின் வெளியே இன்று (வியாழக்கிழமை) காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து அடனா பகுதி கவர்னர் கூறும்போது, "கவர்னர் அலுவக கட்டிடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

குண்டுவெடிப்பினால் கவர்னர் அலுவலகக் கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டுவெடிப்பை பெண் ஒருவர் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in