கரோனாவால் சீனாவில் பொது முடக்கம் நீட்டிப்பு

கரோனாவால் சீனாவில் பொது முடக்கம் நீட்டிப்பு
Updated on
1 min read

பெய்ஜிங்: தொடரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கடந்தசில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 3,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குவாங்சூ, ஜெங்சூ, மங்கோலியா பகுதி, ஜின்ஜியாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in