Published : 09 Jul 2022 11:40 AM
Last Updated : 09 Jul 2022 11:40 AM

இலங்கையில் மீண்டும் போராட்டம்: அதிபர் மாளிகையை முற்றுகையிட குவிந்த மக்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்ளே நுழைய முற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.

இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை.

அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர். இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கடந்தமுறை போன்று வன்முறை ஏற்படலாம் என்பதால், ஆயுதங்களுடன் ஆயிரத்துக்கு அதிகமான பாதுகாப்பு படை பிரிவினர் கொழும்புக்கு வந்திறங்கியுள்ளனர். சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் கொழும்புவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊராடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்து இருந்தனர்.

னால் போராட்டத்துக்கு தடையில்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊரடங்கு வாபஸ் பெற்றுள்ளது. அதேசமயம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிவில் உரிமை ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்கு அருகில் குழுமியுள்ளனர். கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ராணுவத் தடுப்புகளை மக்கள் இரவு உடைத்து உள்ளே புக முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து அவர்களை விரட்டினர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x